Friday, November 27, 2009

அமெக்டாலா - உணர்ச்சி வசப்படுதல் பற்றிய அறிவியல் தகவல்



அமெக்டாலா Amygdala:

அமெக்டாலாவை பற்றி தமிழி வந்த முதல் நூல்
"இட்லியாக இருங்கள்". சோம. வள்ளியப்பன்,
-------வாசித்து பாருங்கள்.

மூளை யின் இரண்டு பக்கமும், பக்கவாட்டுப் பகுதியில் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டுள்ள சிறிய சைஸ் பாதாம் பருப்பு அளவேயுள்ள உறுப்பு. இது தோற்றத்துக்கு பாதாம் பருப்பினை போல் இருப்பதால் ‌ பாதாம் பருப்பி‌ன் கிரேக்கப் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள்.













நியோகார்டெக்ஸ் தான் அன்பு பாசம், காதல் போன்ற உணர்ச்சிகளின் தலைக்காவேரி என்று சொல்லலாம். நம்முடைய அத்தனை வளர்ச்சிகளுக்கும் இன்றைய விபரீதச் சிந்தனைகளுக்கும் இவர்தான் காரணம். ஆனால் அமிக்டலா , நியோகார்டெக்ஸ் முன்னரே விலங்குகளின் தலைக்குள் வந்துவிட்ட சீனியர்.


அமிக்டலா நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுபவர்

நடக்கும் நம்பவங்களை வைத்து, இவர் நல்லவர் அவர் கெட்டவர் என்பதையெல்லாம் மனம் தனக்குத் தெரிந்த விதம் புரிந்து கொண்டு, உள்ளே போட்டுக்கொள்கிறது. பின்பு, அதை ஒட்டியே மற்ற செயல்பாடுகளை நடத்துகிறது. வேண்டியவர் வேண்டாதவர்கள் என்கிற எண்ணம் உருவாவது இப்படித்தான் .

மூளையில் இரண்டு வகையான நினைவு முறைகள் உள்ளன. ஒன்று, சாதாரண விஷயங்களை நினைவு வைத்துக் கொள்வது. அதன் பெயர் ‌ ஹிப்போகேம்பஸ். மற்றொன்று உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அதுதான் அமிக்டலா. எமொஷனல் மெமரீஸ் ஸ்டோர்.

இனம் தெரியாத பயம், கோபம் அல்லது சிலரைப் பார்த்தாலே பாசம் பொங்குவது ஏன் என்று நமக்குக் காரணம் தெரியாத உணர்வுகள், சிலருக்கு மிக அருகில் சந்தித்த விபத்துகள், அங்கு பார்த்த ரத்தம், ஆஸ்பத்திரி வாசனைகள் இன்னும் சிலருக்கு அவர்களைப் பயமுறுத்திய குரல்கள்.
என நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுபவர் இந்த அ‌மிக்டலா தான்.

கண், காது மூக்கு, உடம்பு, நாக்கு போன்ற எந்த புலனிலிருந்து ஒரு செய்தி முதலில் தலாமஸ‌்‌ு க்கு தான் போகும் தலாமஸ், அந்த விவரங்களை மூளை புரிந்து கொள்ளும் விதமாக மாற்றும்.
ஆனால் சில ஆபத்தான சமயங்களில், செய்தி, தலாமஸ‌ு க்கு போகும் போதே இன்னொரு ரூட்டில் அமிக்டலாவுக்கும் போய்விடும். நியோகார்டெக்ஸ்க்கு தகவல் தெரியும் முன்னரே அமிக்டலாவுக்குத் தகவல் நேரடியாகப் போய் அவரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்.


சரி, எப்படி இந்த அமிக்டலாவை கட்டுப்படுத்துவது,
மனதில் ஒடும் எரிச்சல் மற்றும் வெறுப்பலைகளின் வேகத்தினையும், போக்கினையும் சரியாகக் கவனித்தல், மனத்தின் எண்ண ஓட்டத்தினை, தானே வெளியாள் போல, கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தல்.
மேலும், தன்னைக் குறித்த மிகத் துல்லியமான மதிப்பீடு (Accurate Self Assessment)
தன் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் தெரிந்து கொள்வது தான் செல்ஃப் அ‌வேர்னஸ்.

Saturday, November 21, 2009

முடி வளர சித்தமருத்துவம்

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.


சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளநரை... முதுநரை... எதுவரை?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளநரை... முதுநரை... எதுவரை?
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்



இப்போது பரவலாக இருக்கும் பிரச்னை இளநரை. இதனால் பலரும் ஹேர் டை உபயோகிக்கிறார்கள். ஆனால் அவை கெமிக்கல் டை என்பதால் பல கெடுதல்கள் ஏற்படுகின்றன. இயற்கையான முறையில் முடி கருப்பாக வளர என்ன செய்ய வேண்டும். இயற்கை ஹேர் டை எப்படித் தயாரிப்பது?கலைமுருகன்,மயிலாடுதுறை.

திரிபலா சூரணத்துடன் அதி மதுரமும் பொடித்துச் சேர்த்து ஆயுர்வேத மருந்துக் கடைகளில் திரிபலாதி சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. ஓர் இரும்புச் சட்டியில் சுமார் 50 கிராம் திரிபலாதி சூரணத்தைப் போட்டு, நீலி பிருங்காதி எனும் தைலத்தை சிறிது விட்டு இளந்தீயில் வறுக்கவும். வெளிர் மஞ்சள் நிறத்திலுள்ள திரிபலா சூரணம், கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாகத் தொடங்கும். நன்றாகக் கறுப்பாக மாறியதும், அதிகம் வறுத்துவிடாமல், அதைக் கீழே இறக்கி, சூடு ஆறும் வரை இரும்புச் சட்டியிலேயே வைத்திருக்கவும்.அதன் பிறகு கறுப்பாக மாறிய இந்தச் சூரணத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். இந்தப் பொடியை சிறு அளவில் ஒரு கிண்ணத்தில் எடுத்து, நீலி பிருங்காதி தைலத்தைக் கொஞ்சமாக விட்டுக் குழைத்து ஹேர் டை பிரஷ்ஷில் நனைத்து, வெளுத்துப் போன முடிகளில் வேர் முதல் நுனி வரை மெதுவாகத் தடவ, முடி கருப்பாகத் தெரியும். இது ஒரு புதிய முயற்சியே. முடிக்கு எந்தவிதமான கெடுதலும் செய்யாது. கண்களுக்கும்,தோலுக்கும் நல்லது. இதிலுள்ள ஒரு சிறுகுறை தலைக்குக் குளித்தவுடன் இந்தச் சாயம் நீங்கிவிடும். தலைக்கு நல்லது என்பதால் இந்தக் குறையைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

அசல் இரும்புத் துண்டை அரத்தினால் ராவி மிக நுட்பமான இரும்புப் பொடி 300 கிராம் தயாரித்து, வாயகன்ற பீங்கான் பாத்திரத்தில் வைத்து, பொடி நன்றாய் மூழ்கும் அளவு பசுவின் சிறுநீரை ஊற்றி வெயிலில் வைக்கவும். இவ்விதம் 7 நாட்கள் தினம்தோறும் புதிதுபுதிதாய் பசு மூத்திரம் ஊற்றி வெயிலில் வைக்கவும். அதன் பிறகு இரும்புத்தூள் பழுக்கும் வரை இரும்புச் சட்டியில் சூடாக்கி, சூடு ஆறியதும் அம்மியில் அரைக்க வேண்டும். இரும்புப் பொடிக்குச் சமமாக வாயு விடங்கம் 300 கிராம், தேன் நெய் சற்றுத் தூக்கலாகச் சேர்த்து அரைக்கவும். இந்த லேகியத்தை வேங்கை மரத்தின் வைரத்தினால் செய்யப்பட்ட சம்புடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். அதன் மூடியும் வேங்கை மரமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வருடம் அதன் உள்ளே வைத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு காலையில் 3 கிராம், மாலையில் 3 கிராம் அளவு சாப்பிடலாம். 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மயிர் நன்றாக கறுப்பாகி வளரும். ஆயுள்காலம் பூராவும் கேசம் கறுப்பாகவே இருக்கும். நல்ல பலமாகவும் இருக்கும்.

இளநரைக்கு முக்கியமான காரணம், உடலில் பித்த தோஷத்தின் இயற்கைக் காரியம் குன்றுவதும், கெடுவதும்தான். தலைமுடியின் நரை நீங்க அதற்குத் தகுந்த தைலங்களைத் தலையில் தேய்ப்பது மட்டும் முற்றிலும் போதுமானதல்ல. இக்காலத்தில் பூசப்படும் ஹேர் டை, முடிக்குக் கெடுதலை ஏற்படுத்துவதைக் காண்கிறோம். அதனால் செயற்கைச் சாயம் பூசுவது கெடுதல். மேலுக்குத் தகுந்த தைலங்கள் பூசிக் கொண்டு உள்ளுக்கும் இதுபோன்ற ரசாயனம் சேவிப்பதே நன்மை தரும்.

விற்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் சியவனப்ராசம் லேஹ்யம், நாரசிம்ஹ ரசாயனம், குமார்யாஸவம் லோஹ பஸ்மம் போன்ற உள் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட மிகவும் நல்லது.

Sunday, July 12, 2009

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிகப் பசி...அதிக சோர்வு!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிகப் பசி...அதிக சோர்வு!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்


நான் சர்வசாதாரணமாக 8 முதல் 10 இட்லிகள் சாப்பிடுகிறேன். அதுபோலவே 8 - 10 சப்பாத்திகள், பூரி, தோசை என்றெல்லாம் சாப்பிட்டாலும் அவை அனைத்தும் விரைவில் ஜீரணமாகி, மறுபடியும் பசி எடுத்துவிடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? அதிகப் பசியினால் உடல் சோர்ந்து, வாய் வரண்டு போகிறது. இந்த உபாதை தீர ஆயுர்வேத மருந்துகளும், என்ன உணவு வகைகளும் சாப்பிட வேண்டும்?

ரங்கராஜன், சென்னை.

உடலில் இயற்கையாக இருப்பதைவிட கபம் குறையும் போது பித்தம் சீற்றமடைந்து பசித்தீயின் அருகில் தங்கும். வாதத்துடன் சேர்ந்து தனக்கு உரியதான இயற்கைச் சூட்டினால் சீரணப்பையில் உள்ள நெருப்பிற்கு வலிமையைக் கொடுக்கும். இவ்வாறு பித்தத்தின் சூட்டினாலும் வாதத்தின் தூண்டுதலினாலும் வீறு கொண்ட பசித்தீ வரண்டு போன உடலில் உணவை லட்சியம் செய்யாமல் எத்தகைய உணவையும் விரைவில் அடிக்கடி எளிதில் செரிக்கச் செய்துவிடும். அத்துடன் நில்லாமல் உணவு சீரணமானதும் வலிமை பெற்ற பசித்தீக்கு உணவில்லாவிடில் இரத்தம் முதலிய தாதுக்களையும் எரிக்கும். அதனால்தான் உங்களுக்கு உடல் சோர்ந்து வாய் வரண்டு போகிறது.

நன்றாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை நீர் ஊற்றி அணைப்பதுபோல எளிதில் செரிக்காத எண்ணெய்ப் பசை, குளிர்ச்சியான வீர்யம் மற்றும் இனிப்புச் சுவை கொண்ட நீர்த்தோற்றத்தில் உள்ள குடிநீர் வகைகள், எள்ளுடன் கலந்து பக்குவம் செய்யப்பட்ட இறைச்சி மாவினாலும் வெல்லத்தினாலும் செய்யப்பட்ட உணவு வகைகள் முதலியவற்றைப் பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்டுள்ள பசித்தீயைச் சமப்படுத்த வேண்டும்.

அந்த வகையில் பால் பாயசம், பயத்தம் பருப்பு, நெய் இவற்றைச் சேர்த்து பக்குவம் செய்த சாதம், நெய்யில் பக்குவம் செய்த தின்பண்டங்கள், நிலையாக நிற்கும் தண்ணீரில் வாழும் மீன் போன்ற பிராணிகளுடைய இறைச்சிகள், கொழுத்த செம்மறியாட்டின் மாமிசம் முதலியவற்றையும் மிகுதியான பசித்தீயைத் தணிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

1 டம்ளர் (சுமார் 250 கிராம்) பச்சரிசியில், 6 டம்ளர் தண்ணீர் விட்டு, சாதம் வெந்தவுடன் வடிகட்டி, அந்தக் கஞ்சியில், 5 கிராம் தேன் மெழுகு கலந்து உணவாகப் பருகலாம்.

1 டம்ளர் கோதுமையை வறுத்து மாவரைத்து நெய் கலந்து, சுமார் 4 - 5 டம்ளர் தண்ணீர் கலந்து கஞ்சியாகக் காய்ச்சி மதிய உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகப் பருக மிக நல்லது.

அரை டம்ளர் எள்ளு, அரை டம்ளர் உளுந்து முதலியவற்றை நன்றாக அரைத்துச் சுடுநீர் சர்க்கரை சேர்த்து உருண்டைகளாக்கிப் பக்குவம் செய்து உட்கொள்ளச் செய்தால் வீறு கொண்ட பசித்தீ மென்மையடையும்.

எண்ணெய்ப் பசையுள்ள மாமிச சூப்பைப் பருகுவது, நெய்யில் தேன் மெழுகு கலந்து குளிர்ந்த நீரும் கலந்து பருகுதல், கோதுமை மாவை நெய்யும் அல்லது பாலும் கலந்து உண்பது முதலியன நல்லது.

நெய், மாமிசத்திலுள்ள எண்ணெய்ப் பகுதி, எலும்புக்குள்ளிருக்கும் மஜ்ஜை இம்மூன்று வகை எண்ணெய்களையும் கோதுமை மாவுடன் கலந்து பாலுடன் சேர்த்துச் சாப்பிட, பசித்தீ அடங்கும். இதைச் சாப்பிட்ட பிறகு, பகலில் படுத்துத் தூங்குவது நல்லது.

இவ்வாறு கொழுப்புச் சத்துள்ள உணவைச் சாப்பிடுவதால் குறைந்துபோன கபம் வளரும். சீற்றமாயிருந்த பித்தமும் தணியும். வாதம் இயற்கை நிலையை அடையும். சடராக்கினி எனும் பசித்தீ சமநிலையை அடையும். தாதுக்கள் இயற்கைநிலையில் இருக்கும். சமநிலையிலுள்ள அக்கினி உணவைச் சரியாகப் பக்குவம் செய்து உடல் வளர்ச்சி ஆயுள் வலிமை இவற்றை வளர்க்கிறது.

மிருத்வீகாதி லேஹ்யம், பரூஷகாதி லேஹ்யம், அமிருத ப்ராசம் கிருதம், ப்ருகத்சாகலாதிகிருதம், சங்கபஸ்மம், ஹிங்குல பஸ்மம், அப்ரக பஸ்மம், விதார்தியாதி லேஹ்யம், திகார்ஷாதி கஷாயம் போன்ற சில ஆயுர்வேத மருந்துகள் கொழுந்துவிட்டு எரியும் பசித்தீயைச் சாந்தப்படுத்தும் வீர்யம் கொண்டவை. உங்களுக்கு அருகாமையிலுள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகி, எது தங்களுக்குப் பொருந்துமோ அதை அவரிடமிருந்து வாங்கிச் சாப்பிட்டு உபாதையிலிருந்து விடுபடலாம்.
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 17: கடக ராசி - முருக்கன்; சிம்ம ராசி - பாதிரி


நண்டு வடிவில் வானத்தில் நட்சத்திரக் கூட்டம் காணப்படுகிறது. இதற்கு கடக ராசி என்பார்கள். இந்த நட்சத்திர மண்டலம் சந்திர கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. கடக ராசி மண்டலத்தின் கதிர்வீச்சுகள் மார்பகம் மற்றும் நெஞ்சு பகுதியில் உள்ள உள் உறுப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. இதன் கெட்ட கதிர்வீச்சுகள் நுரையீரல், இதயம், மார்பக மற்றும் நெஞ்சு எலும்புகளைப் பாதிக்கக்கூடும். பஞ்ச பூதங்களில் இது நீருடன் தொடர்பு கொண்டது. இந்த ராசியில் பிறந்தவர்கள் பெற்றோரிடம் அன்புடன் இருப்பார்கள். இவர்களுக்கு நிலைமாறும் குணங்கள் இருக்கும். திங்கட்கிழமை பிறந்தவர்களுக்கும் ஜூன் 21 ந்தேதி முதல் ஜூலை 22 வரை பிறந்தவர்களுக்கும் ஏற்ற மரம் முருக்கன் மரமாகும். இம்மரத்தை இவர்கள் அரைமணி நேரம் கட்டிப்பிடித்தால் அல்லது நிழலில் உட்கார்ந்தால் சந்திர கிரக தோஷமும், கடக ராசி நட்சத்திரங்களின் தோஷமும் நீங்கும்.

இந்தக் கிரகங்களினால் ஏற்பட்ட நோய்களும் குணம் பெறும் இதைப் பற்றி கடந்த இதழ்களில் சந்திர கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ள முருக்கன் மரத்தைப் பற்றிக் கட்டுரை எண் 5 இல் சொல்லப்பட்டுள்ளது. வாசகர்கள் விபரங்களுக்கு அதையும் பார்க்கலாம்.

இவ்விதழில் சிம்மராசிக்காரர்களுக்குப் பயன்தரும் பாதிரி மரத்தைப் பற்றியும் பார்ப்போம்.

சிம்ம ராசி - பாதிரி மரம்

ஒரு மனிதனின் உடல் அமைப்பு, மனநிலை, பழக்க வழக்கங்கள் எல்லாம் அவர்கள் பிறந்த நேரம், காலம் அப்போது ஆட்சியில் இருக்கும் கிரகம், நட்சத்திரங்களைப் பொறுத்துத்தான் அமைகிறது என வானவியல் சாஸ்திரம் கூறுகிறது. சூரிய கிரகம், சிம்ம ராசி, ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22 வரை பிறந்தவர்கள் மகம் நட்சத்திரம், பூரம் நட்சத்திரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இயற்கையாகவே நிலையான குணம் உடையவர்களாகவும், பிள்ளைகள் மீது அளவில்லாத பாசம் இருப்பவர்களாகவும் விளங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் இதய நோய்களால் பாதிக்கப்படுவார்கள். இந்த ராசி, நட்சத்திரமானது பஞ்சபூதங்களில் நெருப்புடன் தொடர்புடையது.

சிம்மராசி மண்டல நட்சத்திரக் கூட்டத்தின், கெட்ட கதிர்வீச்சுகளால் பலவகையான நோய்கள் உண்டாகின்றன. அதற்குக் கிரக தோஷம், இராகு தோஷம் என்பார்கள். இதனைத் தடுக்கவும், தோஷத்தால் உண்டான நோய்களைக் குணப்படுத்தவும் பாதிரி மரம் பயன் அளிக்கிறது.

இம்மரத்துக்கு ஆங்கிலத்தில் Stereospermum suavelons d.c., PAADARIA எனவும் அழைப்பார்கள். இந்து முனிவர்கள், ஜெயின் தீர்த்தங்கரர்கள், சாதுக்கள் இம்மரத்தின் அடியில் தவம் இருந்து ஞானம் பெற்றுள்ளனர். பெருமளவு மின்காந்த சக்தி இம்மரத்தின் ஒருபகுதியுடன் தொடர்பு கொண்டுள்ளது. மேலும் இவை, இயற்கையான சக்திகளை மனிதனுக்குப் பெற்றுத் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மரம் பெண்களை மயக்க வைக்கும் பூக்களைத் தருகிறது. பெண்களை வசியப்படுத்த இதைப் போலிச் சாமியார்கள், மந்திரவாதிகள் பயன்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.

இம்மரத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 12 வகையான நறுமணம் கொண்ட பூக்கள் மலருவது விசேஷமான செய்தியாகும்.

இலைச் சாற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் உஷ்ணம் நீங்கும்.

பூக்களை அரைத்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் மேக நோய், விக்கல் குணம் பெறும்.

வேரை உலரவைத்துப் பவுடராக்கிச் சாப்பிட்டால் சர்க்கரைப் புண், மூலம் குணம் பெறும்.

ஒரு பங்கு மரப்பட்டை, 10 பங்கு தண்ணீரில் ஊற வைத்து அதனை 15 முதல் 30 மில்லி வரை, தினசரி 2 வேளை குடித்தால் இரத்த சோகை, இருமல், வயிற்றுவலி குணம் பெறும்.

இம்மரத்தின் பூக்கள், பட்டை, வேர், இலைகள் என அனைத்தும் சிறுநீரக நோய்க்கு நல்ல மருந்து எனக் கூறப்பட்டுள்ளது.

2 பங்கு மரப்பட்டையை 10 பங்கு தண்ணீரில் ஊற வைத்து 15 மில்லி அளவிற்கு தினசரி 2 முறை குடித்தால் இரத்த சோகை அதாவது ஹீமோகுளோபின் உற்பத்தி தடைபடுவதைக் குணமாக்குகிறது.

முருக்கன் மரம், பாதிரி மரம் ஆகியவற்றை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்திலும் காணலாம்.

Sunday, May 31, 2009

தமிழ் ரேடியோ Tool bar

This summary is not available. Please click here to view the post.

Sunday, May 10, 2009

நோய் தீர்க்கும் ராசி மரங்கள் : அரச மரம்

நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 12: தர்ப்பைப் புல் - கேது கிரகம்

டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்


வக்கிரகங்களில் 9 வது கிரகம் கேது கிரகமாகும். இதற்கு ஆங்கிலத்தில் நெப்டியூன் என்பார்கள். அரபு நாட்டு வானவியல் சாஸ்திரத்திலும், இந்திய வானவியல் சாஸ்திரத்திலும் இந்த கிரகத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கிரகத்துக்கு நிரந்தர இடம் கிடையாது என்பதால் மற்ற 7 கிரகங்களிலும் சிறிது காலம் தங்கியிருந்து சுற்றிக் கொண்டிருக்கும். இக்கிரகம் ஞானம் தருதல், வம்சத்தை விருத்தி செய்தல், மோட்சம் கொடுத்தல், மரணத்தை உண்டாக்குதல் போன்ற பணிகளையும், தீங்குகளையும் ஏற்படுத்தும் குணம் கொண்டது. இதனால் இந்தக் கிரகத்தின் காலத்தை எமகண்ட காலம் என்று சொல்வார்கள். இந்நேரத்தில் எந்த செயல் செய்தாலும் விபத்தோ, மரணமோ ஏற்படும் என்று மக்கள் நம்புகின்றனர்.கேது கிரகத்தின் தோஷத்தை நீக்குவதற்காகவும், அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளையும், கெடுதல்களையும் நீக்குவதற்காகவும், தர்ப்பைப் புல்லைப் பயன்படுத்துவார்கள். தர்ப்பைப் புல் கேது கிரகத்துடன் தொடர்புள்ள பல்வகைத் தாவரமாகும்.இராமபிரானுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும், இரண்டாவது பிள்ளையின் பெயர் குசா எனவும் அவருடைய பெயரைக் குறிக்கும் வகையில் இந்தப் புல்லுக்கு குசா புல் என்று பெயரிடப்பட்டு வடநாட்டு மக்கள் அழைக்கின்றார்கள்.நம்நாட்டில் நவக்கிரகக் கோவில்கள் உள்ளன. அவற்றில் கேது கிரகத்துக்குத் தனியாக ஒரு விக்கிரகம் அமைத்து அதற்கு பூஜை செய்த பின் தர்ப்பைப் புல்லைத் தொட்டு வணங்கும் பழக்கம் இன்றும் கூட இந்து சமுதாய மக்களிடம் காணப்படுகிறது.தர்ப்பைப்புல் கேது கிரகத்தின் கதிர் வீச்சுகளை தன் உடல் முழுவதிலும் நிரப்பிக் கொண்டிருக்கும். அதைத்தான் மருத்துவகுணம் என வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.பொதுவாக கேது கிரகம் மரணத்தை விளைவிக்கக் கூடிய கிரகம் என்று சொல்லப்படுவதால் மரணத்தை உண்டாக்கும் அபாயகரமான நோய்களுக்கு சிகிச்சையளிக்க தர்ப்பைப் புல்லை மூலிகை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.முக்கியமாக சிறுநீரக நோய்கள், சிறுநீரகக் கற்கள், பாம்புக்கடி விஷம், இரத்தம் கலந்த சிறுநீர், சிறுநீர்ப்பைத் தொற்று, புண், இரத்த வாந்தி, காயங்கள், இரத்த மூலம், அளவு கடந்த மாதவிடாய் போக்கு, வெள்ளைப்பாடு போன்ற நோய்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
*தர்ப்பைப் புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.
*உடலில் தாய்ப்பாலை அதிக அளவு சுரக்கச் செய்கிறது.
*சிறுநீரை அதிக அளவில் பெருக்கச் செய்கிறது.
*பாம்புக்கடி விஷத்தை அகற்றுகிறது.
*வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை நீக்கிச் சுத்தம் செய்கிறது.
*சிறுநீரகக் கற்களைச் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றுகிறது.
*உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது.
*ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.கேது கிரகம் 12 ராசிகளுக்கும் உரியது. முக்கியமாக மீனம் ராசியுடன் தொடர்பு கொண்டது. அஸ்வினி நட்சத்திரம், மகம் நட்சத்திரம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 வரை பிறந்தவர்களுக்கும் தர்ப்பைப் புல் பயன்தரும் முக்கியத் தாவரமாகத் திகழ்கிறது.கேது கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகள், முக்கியமாக கால் பாதங்களைப் பாதிக்கக் கூடியவை. கேது கிரக நேரத்தில் பிறந்தவர்களுக்கு நிலையான ஒரு குணமில்லாமல் இரண்டு குணங்கள் இருக்கும். அனைவருடனும் பகைத்துக் கொள்ளும் குணம் இருக்கும். இந்தக் கிரகத்தின் தோஷத்தைப் போக்க தர்ப்பைப் புல்லைப் பயன்படுத்தலாம்.தர்ப்பப் புல் வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது.(தொடரும்)


நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 11: அருகம்புல் - ராகு கிரகம்
டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்



பெரும்பாலான இந்து சமுதாய மக்கள் வானவியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு நாளின் 24 மணி நேரத்தைப் பிரித்து இதில் மனிதனுக்கு அதிக அளவில் நன்மைதரும் நேரத்தையும், தீமை தரும் நேரத்தையும் தனித் தனியாக அடையாளம் காட்டி அதனைப் பின்பற்றி வருகின்றனர். தினசரி ஒன்றரை மணி நேரம் இராகு காலம் என்றும், ஒன்றரை மணி நேரம் எம கண்டம் என்றும் அதுவும் மிகவும் மோசமான நேரம் என்றும், ஒன்றரை மணி நேரம் குளிகை காலம் என்றும், இது சுமாரான கெட்ட நேரம் என்றும் அடையாளம் காட்டியிருக்கின்றார்கள். தினசரி காலண்டரில் அதன் அட்டவணை நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். அதன்படி பலர், நல்ல நேரத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகளைத் தொடங்குவார்கள். கெட்ட நேரங்களில் நல்ல காரியங்கள் செய்வதைத் தவிர்ப்பார்கள். இந்த மூன்று கெட்ட நேரங்களில் ராகு காலத்தைப் பொதுவாகக் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். இராகு என்பது ஒரு கிரகத்தின் பெயராகும். இந்த கிரகத்துக்கு ஆங்கிலத்தில் புளூட்டோ என்பார்கள். இந்த கிரகத்தின் செயல்பாடுகள் ஒன்றரை மணி நேரம் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. அதனால்தான் புளூட்டோ கிரகத்தின் நேரத்துக்கு இராகு காலம் என்பார்கள். இராகு கிரகத்தினால் உண்டாகும் தோஷத்தை நீக்க இந்து சமுதாய மக்கள் நவக்கிரக ஆலயத்துக்கு சென்று இராகு பகவான் விக்கிரகத்தை வணங்கிவிட்டு, அருகம்புல்லைத் தொட்டு வணங்கிவிட்டு வருவார்கள். அருகம்புல் இராகு கிரகத்துடன் தொடர்பு கொண்ட புல்வகைத் தாவரம் என்று யுனானி, சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன. உலகம் தோன்றிய நாள் தொட்டு உயிருடன் வாழும் ஒரே உயிர் அருகம்புல் மட்டுமே என சங்க இலக்கிய நூலான பட்டினப்பாலை கூறுகிறது. உண்மையில் அருகம்புல் இராகு கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் சேகரித்து வைத்துக் கொள்ளும், அதைத் தீர்த்தமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும்போது நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன் இராகு கிரக தோஷத்தையும் நீக்குகிறது என்று யுனானி மற்றும் சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. ஆரோக்கியமான மனிதர் ஒருவரின் 2 சிறுநீரகங்களும் சுருங்கிவிட்டது. டயாலிஸிஸ் செய்ய வேண்டும். கிட்னி மாற்ற வேண்டும் என்று டாக்டர்கள் கூறும்போது, எதனால் அந்தச் சிறுநீரகங்கள் சுருங்கிவிட்டன என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காமல் தத்தளிப்பார்கள். இது புளூட்டோ கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகளினால் உடல் ஆரோக்கியம் கெட்டு அதனால் சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுகின்றன என்று மூலிகை வானவியல் சாஸ்திரம் கூறுகிறது. எனவே மருத்துவ விஞ்ஞானம் சில நோய்களுக்கான காரணங்களுக்கு இன்னும் விளக்கம் அளிக்காமலேயே உள்ளது. அருகம்புல் முழு செடியும் மருந்தாகப் பயன் அளிக்கிறது. சிறுநீரில் இரத்தம் கசிதல், சிறுநீரகங்களில் கட்டிகள் தோன்றுதல், மேகம், வெட்டை, பால்வினை நோய்கள், எய்ட்ஸ், கிட்னி ஃபெயிலியர், லிவர் ஃபெயிலியர், சிறுநீரகக் கற்கள், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், அக்கி என்னும் தோல் நோய், உள் மூலம், நாக்கு வறட்சி, எரிச்சல் போன்ற நோய்களுக்கு மூலிகை மருத்துவர்கள் அருகம்புல்லைத் தருகின்றனர். அருகம்புல்லையும், மஞ்சளையும் அரைத்து எக்ஸிமா, ரிங்வார்ம், படைகள், வண்டுக்கடி போன்ற தோல் நோய்கள் மீது களிம்பாகப் பூசுவார்கள். பொதுவாக 10 முதல் 20 மில்லி வரை அருகம்புல் சாற்றை மருந்தாக குடிக்கச் செய்வார்கள். அருகம்புல்லை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து பார்த்ததில் நச்சுக் கிருமிகளைக் கொல்லும் மருத்துவக் குணங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகம்புல்லை பசையாக்கி, பெண்களுக்கு அடிவயிற்றில் பூசினால் அதிகமான இரத்தப் போக்குக் கழிவது உடனடியாகக் குறைகிறது. அருகம்புல் முழு செடி 200 கிராம், மிளகு 150 கிராம், சீரகம் 100 கிராம் என மூன்றையும் இடித்து 2 லிட்டர் எள் எண்ணெயில் கலந்து 15 நாட்கள் கடும் வெயிலில் வைக்க வேண்டும். 16 வது நாள் வடிகட்டிய எண்ணெயை மட்டும் பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். தினசரி தலையில் பூசி வந்தால் பலதரப்பட்ட கண்நோய்கள் குணம் பெறுகின்றன. யுனானி மருத்துவர்கள் அருகம்புல்லைப் பவுடராக்கி, வேளைக்கு 3 கிராம் சாப்பிடக் கொடுப்பார்கள். சிறுநீரக நோய்களுக்கு லேகியம், ஷர்பத் தயாரித்துக் கொடுப்பார்கள். இதனால் தடைப்பட்ட சிறுநீர் வெளியேறுவதுடன் சிறுநீரகங்களுக்கு வலிமையும் கிடைக்கின்றது. இராகு கிரகம், அடி வயிறு மற்றும் இன விருத்தி உறுப்புகளுடன் தொடர்பு கொண்டது. அக்டோபர் 22 முதல் நவம்பர் 20 வரை பிறந்தவர்களுக்கும், திருவாதிரை நட்சத்திரம், சுவாதி நட்சத்திரம், சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் இராகு கிரக தோஷம் நீக்குவதற்கும் சிறந்த பரிகார மருந்து என்று மூலிகை வானவியல் சாஸ்திரம் கூறுகிறது. பஞ்ச பூதங்களில் இராகு கிரகம் நீருடன் தொடர்பு கொண்டது. இந்த கிரக காலத்தில் பிறந்தவர்களுக்கு நிலையான குணம் இருக்காது. பயந்த சுபாவத்துடன் காணப்படுவார்கள். இதைப் போக்க அருகம்புல்லைப் பயன்படுத்தலாம். அருகம்புல்லைப் பொதுவாக எல்லா இடங்களிலும் காணலாம். விசேஷமாக வாணியம்பாடியில் உள்ள முகல் கார்டன் வானவியல் மூலிகைத் தோட்டத்திலும் வளர்த்து வருகிறோம்.


நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 8 : அரச மரம்

டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்
First Published : 10 May 2009 02:44:36 PM IST


மரங்களில் அபூர்வமான மரம் அரச மரம். அனைத்து தாவரங்களும் 12 மணி நேரம் ஆக்ஸிஜனும், 12 மணிநேரம் கார்பன்-டை-ஆக்சைடும் வெளியேற்றும். ஆனால் அரச மரம் மட்டும் 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் வெளியேற்றும். அதனால்தான் கோயில்களின் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பராமரிக்க அரச மரங்களை நட்டு பராமரிப்பார்கள். இதேப் போல், பொது இடங்களில் கிராமங்களில் அரச மரத்தை நடுவார்கள்.

அரச மரத்திற்கும், வியாழன் (Jupiter) கிரகத்திற்கும் நேரடி தொடர்புகள் இருக்கின்றன. கிரகங்களில் வியாழன் கிரகம் சக்தி வாய்ந்தது. இது குழந்தை பாக்கியம், திருமணம், பணம், வரவு போன்ற காரியங்களுக்கு உதவுவதாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வியாழன் கிரகம் மனிதனின் தொடைப் பகுதியை அதிகளவில் பாதிக்கும். வியாழக்கிழமையன்று வியாழன் கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக காணப்படுகிறது. அதனால்தான் அந்த தினம் வியாழக்கிழமை (Thursday)என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.

தனுசு ராசி, மீனம் ராசி, புனர்பூசம் நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரம் கொண்டவர்களுக்கும் வியாழக்கிழமை பிறந்தவர்களுக்கும், நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை பிறந்தவர்களுக்கும் அரசன் மரம் உகந்த நன்மை தரும் மரமாகும்.

தோல் நோய்கள், காயங்கள், தீப்புண், அஜீரணம், நடக்கும் போது கால் மடங்கிப் போதல், தொழுநோய், மூட்டுவாதம், இதய பலவீனம், மது மற்றும் போதைக்கு அடிமையாகுதல் போன்ற நோய்களும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை.

இந்து சமுதாய மக்கள் வியாழன் கிரகத்திற்கு "குரு' என்று அழைப்பார்கள். வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் நன்மைகள் தரும். கெட்ட கதிர்வீச்சுக்கள் தீங்கு விளைவிக்கும்.

வியாழன் கிரகத்தால் உண்டாகும் நோய்கள், தீமைகளுக்கு வியாழன் தோஷம், குரு தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தை நீக்க நவக்கிரக ஆலயங்களுக்குச் சென்று குரு பகவான் விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகில் உள்ள அரச மரத்தைக் தொட்டு கும்பிட்டு நூறு முறை சுற்றி வருவது இந்து சமுதாய மக்களின் ஐதீகம்.

உண்மையில், அரச மரம் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த மரம் வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் கொண்டு அடைத்து பாதுகாத்துக் கொளளும். அதுதான் இந்த மரத்தின் ஒவ்வொரு பாகததிலும் மருத்துவ குணமாக மாறுகிறது.

மருத்துவ குணங்கள்

இலைகள்: இளம் துளிர்களை பாலில் அல்லது தண்ணீரில் காய்ச்சி, வடிகட்டி சர்க்கரை கலந்து குடித்து வந்தால் மூளைக்கு பலம் கிடைக்கும்.

இதன் இலைகளை நிழலில் உலர வைத்து, பவுடராக்கி, கருவேலம் பிசின் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி ஒரு மாத்திரையை சுவைத்துச் சாப்பிட்டால் இருமல் குணம் பெறும்.

ஏழு முதிர்ந்த இலைகளை எரித்து, தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடித்துக் குடித்தால் வாந்தி நிற்கும்.

மரப்பட்டை: இம்மரத்தின் பட்டையையும், இலைகளையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் வெட்டை நோய், குஷ்ட நோய் நீங்குவதுடன், இரத்தம் சுத்தமாகும்.

பட்டைச்சாறு: இம்மரத்தின் பட்டைச்சாறு மிகச் சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

பழம்: இம்மரத்தின் பழங்களை நிழலில் உலர வைத்துப் பவுடராக்கி மாதவிலக்கு முடிந்த நாளிலிருந்து தினசரி ஒரு டீ ஸ்பூன் வீதம் பாலில் கலந்து தினசரி ஒருவேளை என பதினான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்னைகள் நீங்கும். இதை ஆண்கள் சாப்பிட்டால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை இனிதாக அமையும். அதனால்தான் "அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்' என்ற பழமொழியும் சொல்லப்படுகிறது. மருத்துவ ரீதியாக அரச மரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும் குணம் இருக்கின்றது.

"ரெய்கி' மருத்துவத்தில் மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சிகிச்சை பிரபலமானது. மரத்தை கட்டிப்பிடிக்கும் போது அதன் நல்ல குணங்கள் நம் உடலில் மாற்றலாகி பல வகையான நோய்களை குணப்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்குகிறது. கிரக தோஷங்களையும் நீக்குகிறது. இம்மரத்தை தினசரி அரை மணி நேரம் கட்டிப்பிடிப்பதால் மேற்கண்ட பலன் கிடைப்பதுடன் நல்ல உடல் நலனும் கிடைக்கிறது.

(தொடரும்)

நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 9: அத்திமரம்

டாக்டர் ஹகீம் எஸ்.அக்பர் கவுஸர்

மரங்களில் திருக்குர் ஆன், பைபிள், வேதங்கள் ஆகிய மூன்றிலும் இடம் பெற்ற ஒரே மரம் அத்தியாகும். இந்த மரம் வெள்ளி கிரகத்துடன் தொடர்பு கொண்டது. வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் காணப்படுகிறது.இந்த கிரகத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுகள் அதிக அளவில் வெளியேறுகிறது. அதனால்தான், வெள்ளி கிரகத்திலிருந்து வெள்ளிக்கிழமை பிறந்தது. இந்த நாள் அன்று முஸ்லீம்கள் விசேஷ தொழுகை நடத்துவார்கள். கிறிஸ்தவர்களுக்கு குட் ஃபிரைடே என்கிற புனித வெள்ளிக்கிழமை விரதம் இருந்து விசேஷ பூஜைகளும் செய்வார்கள்.இந்தக் கிரகம் மனித உடலில் கழுத்து பாகத்தை மிகவும் பாதிக்கச் செய்கிறது. மலச்சிக்கல், வீக்கம், சிறுநீரகக் கோளாறுகள், குடல்புழுக்கள், வெள்ளி கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால்தான் உருவாகின்றன. மனிதனுக்குப் பல வகையான நோய்கள் ஏற்படும் போது கிராம மக்கள் அவற்றில் சிலவற்றை வெள்ளி தோஷம் என்பார்கள். அதாவது வெள்ளி கிரகத்தின் தீய கதிர்வீச்சுளால் ஏற்பட்ட நோய்கள் என்று பொருள் கூறுவர்.அதற்காக இந்து சமுதாய மக்கள் நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று வெள்ளி கிரக விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகிலுள்ள அத்தி மரத்தையும் தொட்டு வணங்கிவிட்டு வெள்ளி கிரகத் தோஷத்தைக் கழிப்பார்கள். வெள்ளி கிரகத்தைச் சுக்கிர பகவான் என்றும் அழைக்கின்றனர்.யுனானி மருத்துவர்கள் வெள்ளி கிரக தோஷத்தை நீக்குவதற்காக அத்தி மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். அத்தி மரத்தின் அடியில் அமரச் செய்வார்கள்.அரை மணிநேரம் அத்தி மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கச் செய்வார்கள். இதனால் வெள்ளி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் நமது உடலில் சென்று நல்ல உடல் நலனைத் தரும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்று ரெய்கி மருத்துவம் கூறுகிறது.அத்தி மரம் வெள்ளி கிரகத்தின் நல்ல மின் கதிர்வீச்சுகளைத் தன் உடலில் உறிஞ்சி நிரப்பிக் கொள்கின்றது. அதுதான் அதனுடைய மருத்துவ குணமாக மாறுகிறது என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.
மருத்துவ குணம்
;அத்தி மரத்தின், இலை, பழம், பால் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.
இலை
:அத்தி மரத்தின் இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் கட்டுப்படுகின்றன.
பட்டை
:அத்தி மரப்பட்டையை இரவில் உலர வைத்துக் காலையில் குடிநீராகச் செய்து குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம்.
பழம்:
நபிபெருமானார் (ஸல்)அவர்கள் அத்திப்பழம், அத்திப் பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிட்டால் மூலம், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு குணம் பெறும் என்று கூறியிருக்கின்றார்கள். மேலும் அத்திப் பழம் சாப்பிடுவதால் சீத பேதி, வெள்ளைப்பாடு, சர்க்கரை நோய், தொண்டைப்புண், வாய்ப்புண், வாத நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களும் குணம் பெறுகின்றன.பழங்களை இடித்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் கட்டுப்படும். நல்ல மணத்துடன் இருந்தாலும் அத்திப் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள் புழுக்கள் இருக்கும். பொதுவாக, பதப்படுத்தாமல் இதை உண்ண முடியாது.தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடைந்து பருமன் ஆகும். இரவில் 5 அத்திப் பழங்களைச் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். அத்திப் பழம் பதப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் "சீமை அத்திப் பழம்' என்ற பெயரில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.பொதுவாக அத்தி மரம் ரிஷபம், துலாம் ராசி கொண்டவர்களுக்கும், கிருத்திகை, ரோகிணி, சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும், வெள்ளிக்கிழமை மற்றும் 21 ஏப்ரல் முதல் 20 மே மாதம் வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த மரமாகும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் விளக்குகிறது.இம்மரத்தை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் காணலாம்.(தொடரும்)



Sunday, April 26, 2009

நோய் தீர்க்கும் ராசி மரங்கள்

நோய் தீர்க்கும் ராசி மரங்கள்
கருங்காலி மரம்
டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்
First Published : 26 Apr 2009 01:45:00 PM IST


குழந்தைகளுக்குப் பலவகையான பயங்கர நோய்கள் ஏற்பட்டு மரணப் பிடியில் இருக்கும் போது, நகம் - உதடு வெளிர் நிறத்தில் மாறும்போது, செவ்வாய் தோஷம் ஏற்பட்டு இருக்கின்றது என்று கூறி கழுதைப் பாலை குடிக்க வைப்பது தமிழக கிராம மக்களின் பழக்கமாகும். பெரியவர்களுக்கு ஏற்படும் நோய்கள், மனப்பிரச்னைகள், உடல் பிரச்னைகள் போன்றவற்றிற்கு செவ்வாய் கிரகத்தின் தீய விளைவுகள்தான் காரணம் எனக் கூறி செவ்வாய் தோஷத்தை அகற்ற நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று அங்கு அங்காரக பகவான் எனும் செவ்வாய் கிரகத்தை வணங்கி அதன் அருகில் இருக்கின்ற கருங்காலி மரத்தைக் கட்டிப்பிடித்து செவ்வாய் தோஷத்தை நீக்கச் செய்வார்கள். இது இந்து சமுதாய மக்களிடம் காணப்படும் பழக்கமாகும். ஒன்பது கிரகங்களில் செவ்வாய் கிரகம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுக்கள் மனிதனுக்கு நன்மையையும், இதன் தீய கதிர் வீச்சுக்கள் நோய்களையும் உண்டாக்குகிறது. முக்கியமாக, செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு தலை உச்சி முதல் கழுத்து வரையிலும், கண் கோளாறுகள், கண் அழற்சி, வீக்கம், இரத்த வாந்தி, பசியின்மை, தொழுநோய், வெண்குஷ்டம், மூலம், சர்க்கரை நோய், குடல் புழுக்கள், உடல் பலவீனம் போன்ற நோய்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை. தாவரங்களுக்கும், கிரகங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. சில தாவரங்கள் குறிப்பிட்ட கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் கொண்டு திளைத்து இருக்கும். அந்த தாவரங்கள் செவ்வாய் கிரகத்தின் தோஷங்களை அகற்றுகிறது. இவ்வகையில், கருங்காலி இனத்தைச் சேர்ந்த முள் மரங்கள் செவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கு சிறந்த மருந்து என வானவியல் சாஸ்திர நூல்களில் கூறப்பட்டு இருக்கிறது. அதனால்தான், அம்மரங்களை செவ்வாய் கிரகக் கோவில்களில் நட்டு வளர்ப்பது வழக்கம். கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர் நோய்களுக்கு இரத்தக் கொதிப்பும், சர்க்கரை நோயும்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அந்த நோய்கள் செவ்வாய்க்கிரகம் மூலம் தான் ஏற்படுகிறது. இம்மரத்தின் அடித்தண்டு, வேர்ப்பட்டை, பூக்கள், பிசின் அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் மரப்பட்டையை மன நோய், கண் நோய், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகத் தருவார்கள். மரத்தூள் ஜூரம், பேதி, வயிற்று நாக்குப்பூச்சி, வலி, வீக்கம், வெண்குஷ்டம், குஷ்டம், நோய் அரிப்பு, அழுகிய புண், சர்க்கரை நோய் ஆகியவற்றை குணமாக்குகின்றது. சீமைக் காசிக்கட்டி எனும் இதன் பிசினை வெற்றிலை பாக்கில் வைத்து சிலர் சாப்பிடுவார்கள். இதனால் பற்களில் இரத்தக் கசிவு மற்றும் ஈறுகளில் உணர்வற்ற நிலையைப் போக்குகிறது. வாய்ப்புண்ணைக் குணமாக்குகிறது. கருங்காலி மரம் மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மரமும், மருந்துமாகும். இந்தக் காலங்களில் செவ்வாய்க் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் அதிகளவில் வெளியேறுகின்றன. அதனால்தான் செவ்வாய்கிரகம் வலிமையாகக் காணப்படும் நாளுக்கு செவ்வாய்க்கிழமை என்றும் அழைப்பார்கள். மேற்கண்ட நோய்கள் நீங்க கருங்காலி மரத்தை அரை மணி நேரம் கட்டிப் பிடிக்கலாம். இதனால் மரத்தின் மருத்துவ குணங்கள் நம் உடலில் மாற்றலாகி நோய்கள் குணம் பெறுகின்றன என்று "ரெய்கி' மருத்துவம் கூறுகிறது. மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படி கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம். இந்த மரங்களை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள நலம் தரும் வானவியல் மூலிகைத் தோட்டத்தில் காணலாம்.


நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 10: வன்னி மரம்
டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்


ஒருவருக்கு அடிக்கடி துன்பங்களும், வேதனைகளும் உடல் நிலையும் பாதிக்கப்படும் போது அல்லது கெட்ட காலம் இருக்கும்போது "எனக்குப் பிடித்த சனி எப்போதுதான் போகுமோ' என்பார்கள். ஒன்பது கிரகங்களில் சனி கிரகம் (saturn) மிகவும் சக்தி வாய்ந்தது. இது முழங்கால் மூட்டுகள் உள்ள பகுதியில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. சனிக்கிழமை என்ற வார்த்தை சனி கிரகத்தைத்தான் குறிக்கின்றது. சனிக்கிழமையன்று சனி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதனால்தான் அந்நாளுக்கு Saturn+day=Saturday என்று அழைக்கப்படுகிறது. மூட்டுவாதம், ஆஸ்துமா, மூலம் போன்ற நோய்கள் சனி கிரகத்தால்தான் ஏற்படுகின்றது. இந்து சமுதாய மக்களில் சிலர் கஷ்டமான காலகட்டத்தில் சனி தோஷத்தை நீக்கிக் கொள்ள நவக்கிரக கோயிலில் உள்ள சனி விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகில் உள்ள வன்னி மரத்தையும் தொட்டுக் கும்பிட்டு அதைச் சுற்றி வருவார்கள். இதனால் சனி தோஷம் நீங்கிவிடுவதாக நம்பப்படுகிறது. உண்மையில் வன்னிமரம் சனி கிரகத்துடன் தொடர்பு கொண்ட மரமாகும். இந்த மரம் சனி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை சுவாசித்து தன் உடலில் நிரப்பிக் கொள்கிறது. அதுதான் மருத்துவ குணங்களாக மாறுகின்றன. இந்த மரம் சனிகிரகத்தினால் உண்டாகும் நோய்களைக் குணமாக்குவதுடன் நோய்கள் வராமலும் தடுக்கின்றது. சனி தோஷம் நீங்க வன்னி மரத்தைத் தினசரி அரை மணி நேரம் கட்டிப் பிடித்தால் போதும். சனி தோஷம் நீங்கும். சனி கிரகத்தின் தீய விளைவுகளும் நீங்கும் என்று ரெய்கி மருத்துவம் கூறுகிறது. இதனால்தான் யுனானி மருத்துவர்கள் வன்னி மரத்தை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். மருத்துவக் குணங்கள் : காய்: வன்னிக் காய் பெண்களின் அதிகமான மாதவிலக்கு, இரத்தப்போக்கைத் தடுக்கச் சிறந்த மருந்தாகும். இதனைப் பவுடராக்கி 5 கிராம் முதல் 7 கிராம் வரை மருந்தாகத் தரலாம். இந்தப் பவுடரைத் தேவைப்படும்போது சாப்பிட்டால் சீதபேதி, மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், இரத்த வாந்தி, சளியில் ரத்தம் கலந்து வரும் நோய்கள் கட்டுப்படும். வன்னிக்காயைத் தண்ணீரில் கொதிக்க வைக்கலாம். அந்நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் ஈறுகள், பற்கள், வாய், நாக்கின் ரணம், வலி, வீக்கம் போன்றவை குணம் பெறும். இலை:வன்னி மரத்தின் இலைகளைக் கஷாயமிட்டு வாய் கொப்பளித்தால் பல் வலி நீங்கும். மரம்: இதன் மரத்தை எரித்துவரும் சாம்பலைக் கொண்டு பல்துலக்கினால் பற்கள் வலுப்பெறும். தயாரிக்கப்பட்ட மருந்துகள் : வன்னி மரத்தைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்கிறார்கள். குறிப்பாக ஹப்பே பேசிஷ், சஃபூப் கலான், சஃபூப்சீலானுல் ரஹம், சஃபூப் கஜ்வாலா, சஃபூப் பாஸ், ஜரூர் முஜஃபஃப், தவாயே காகரா, தவாயே காஸ், மாஜுன் ஸôலப், மாஜுன் ஜாலிநியுஸ், மாஜுன் சோப்சீனி பனுஸ்கா கலான் போன்ற பலவகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதை மருத்துவர்களின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். பொதுவாக மகரம், கும்பம் ராசி கொண்டவர்களுக்கும், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரை மற்றும் சனிக்கிழமை பிறந்தவர்களுக்கும் உண்டாகும் நோய்களுக்கு சனிகிரகம்தான் காரணம் என வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது. அவர்கள் வன்னிமரத்தை வீட்டிலோ, தோட்டத்திலோ வளர்க்கலாம். அதனைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளை மூலிகை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இந்த மரத்தை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் காணலாம்.

நன்றி தினமணி கதிர்

Saturday, April 25, 2009

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

30.11.2008.pdf
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் சூடு தணிய...
First Published : 26 Apr 2009


எனக்கு வயது 22. எடை 48 கிலோ. எனக்கு உடல் சூடு அதிகமாக இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் நான் பாயை விரித்துப் படுத்து உறங்கி எழுந்ததும், படுத்திருந்த இடத்தில் ஐந்து நிமிடம் வரை சூடாக இருக்கிறது. இதனால் உடல் முழுக்க பருக்கள், கட்டி, உதடு வெடிப்பு, கண் எரிச்சல், உடல் சோர்வு, எடைகுறைவு, வலுவின்மை ஆகியவற்றால் அவதிப்படுகிறேன். இவை குணமாக நான் என்ன செய்ய வேண்டும்?ஹாரீஸ், திருவைகுண்டம். ""பித்தே திக்த: தத:ஸ்வாது: கஷாயஸ்சரúஸôஹித'' என்று ஆயுர்வேதம் கூறும் பித்த தோஷங்களின் குணங்களாகிய சிறிது எண்ணெய்ப் பசை, ஊடுருவும் தன்மை, சூடு, லேசானது, துர்நாற்றம், மலத்தை இளக்கும் தன்மை, திரவம் போன்றவை உடலில் அதிகரிக்கும்போது, சுவைகளில் முக்கியமாக கசப்பும், அதற்கு அடுத்தபடியாக இனிப்பும், மூன்றாவதாக துவர்ப்புச் சுவையும் நிறைந்த மருந்துகளாலும், உணவு வகைகளாலும் அந்தக் குணங்களின் சீற்றத்தை அடக்க வேண்டும் என்று அதற்கு அர்த்தமாகும். மற்ற மூன்று சுவைகளாகிய காரம், புளி மற்றும் உவர்ப்பு ஆகியவற்றை மருந்தாகவோ, உணவாகவோ சாப்பிடக்கூடாது என்ற ஓர் உள்முக அர்த்தமும் இந்த ஸ்லோகத்தில் மறைந்திருக்கிறது. பித்ததோஷத்தின் சீற்றத்தை அடக்குவதைவிட குடலிலிருந்து பேதி மருந்து மூலமாக வெளியேற்றுவது எனும் சிகிச்சைமுறை சிறந்தது. அதற்குக் காரணம், மேற்குறிப்பிட்ட சுவைகளின் மூலம் தோஷத்தின் சீற்றம் அடங்கினாலும், ஒரு சிறிய காரணம் கொண்டு அந்தப் பித்தம் மறுபடியும் அதிகமாகலாம். பித்தத்தை வெளியேற்றிவிட்டால் அது மறுபடியும் சீற்றமாவதற்கு வழியில்லை. ஆனால் பேதி மருந்தைச் சாப்பிடுவதற்கு நோயாளிக்கு உடலில் வலுவிருக்க வேண்டும். உங்களுக்கு வயது 22 தான் ஆகிறது. இந்த இளமையான வயதில் உங்களுக்கு நல்ல உடல் வலுவிருக்க வேண்டும். ஆனால் வலுவின்மை இருப்பதாகக் குறிப்பிடுகிறீர்கள். தமிழகத்தில் கடும் கோடை வேறு தொடங்கிவிட்டது. அதனால் நீங்கள் பேதி மருந்து சாப்பிட்டு, பித்தத்தை வெளியேற்றி அதன் மூலம் உடல் சூட்டைத் தணிக்க முயற்சி மேற்கொள்வதைவிட, உடல் ஏற்படுத்தியிருக்கும் பித்தத்தை அடக்குவதே நல்லதாகும். அந்த வகையில் கீழ்காணும் சில உணவுகளைச் சாப்பிட முயற்சி செய்யவும். முதல்நாள் இரவு மாக்கல்லால் செய்யப்பட்ட கல்சட்டியில் ஊறிய சாதத்தின் தண்ணீரை, சிட்டிகை நெல்லிக்காய் வத்தல் பொடியுடனும், தனியாத் தூளுடனும், சிறிது இந்துப்பு கலந்து 2 - 3 கிளாஸ் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். ருசிக்காக சிறிது வெங்காயத்தைக் கடித்துக் கொள்ளலாம். இதைக் காலை உணவாக ஏற்க, குடலில் ஊறும் பித்த ஊறலை மட்டுப்படுத்தி, உடல் பலவீனத்தை ஏற்படுத்தாமல் சுகமான கழிச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், சிறுகுடல் ஆகிய பகுதிகள் இந்த எளிமையான உணவால், துடைத்துவிட்ட கண்ணாடிப் பாத்திரம்போல் தூய்மையாகிவிடுகின்றன. காலையில் 9 மணிக்கு, பசும்பால் கலந்த அன்னத்தை சிறிது கற்கண்டு பொடித்துச் சேர்த்துச் சாப்பிடவும். பித்த ஊறலை, தனது இனிப்புச் சுவை மற்றும் குளிர்ச்சி எனும் குணத்தால் பசும்பால் கட்டுப்படுத்துகிறது. மதிய உணவாகப் பச்சரிசி சாதத்துடன் மணத்தக்காளிக் கீரைப் பொரியல், வாழைப்பூ வடைகறி, நெல்லிக்காய்த் தயிர்ப்பச்சடி, கேரட் உசிலி, பயத்தம்பருப்பு தூக்கலாக, பசுநெய் சேர்த்து சாப்பிட்டு, தக்காளி ரசம் அல்லது வேப்பம்பூ ரசம், நன்றாக வேக வைத்துச் சீரகம், தேங்காய் சேர்த்து அரைத்த முட்டைக்கோஸ் கூட்டு, பூசணிக்காய் கூட்டு போன்றவற்றை உணவின் நடுவிலும், நன்றாகக் கடைந்த வெண்ணெய் நீக்காத மோர்சாதத்துடன் நார்த்தங்காய் பச்சடியும் சாப்பிடலாம். மாலையில் ஒரு பூவன் வாழைப்பழமும், சிறிது இனிப்பு மாதுளம்பழமும் சாப்பிடலாம். இரவில் பச்சைப் பயறு பெசரேட் தோசை அல்லது சீரகம் சேர்த்த கோதுமையினால் தயாரிக்கப்பட்ட தோசை, சிறிது தேங்காய்ச் சட்டினியுடன் சாப்பிட நல்லது. புலால் உணவு, சமோசா, பீட்ஸô, பிரட் போன்ற துரித உணவு வகைகள், பகல் தூக்கம், மன உளைச்சல் தரும் சிந்தனை, தேவையற்ற கோபம், இரவில் கண்விழித்தல், காபி, டீ, சிகரெட், மதுபானம், பாக்கு போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை. உடல்சூடு தணிய ஆயுர்வேத மருந்தாகிய திராக்ஷôதி கஷாயத்தை 15 மி.லி. அளவில் எடுத்து, 60 மி.லி. கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும். சந்தனாதி தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம்.

நன்றி தினமணி கதிர்



மனித உடல் ரகசியம்

உடல்-மனம்-இந்திரியங்கள்-ஜீவாத்மா ஆகியவற்றின் சேர்க்கை முன் ஜன்மத்தின் கர்ம வாசனைகளால் தகுந்த கருக்குழியை தேர்ந்தெடுத்து மனித உடலாக உருப்பெற்று வளர்கிறது. முன் ஜன்மத்தின் கர்ம வினைகள் சிறப்பாக இருக்குமேயானால் நல்ல ஆசால சீலங்களையும் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த ஒரு குடும்பத்தில் சூக்ஷ்ம சரீர வடிவத்தில் இருந்த ஜீவாத்மா மனித உடலை எடுத்துக் கொண்டு அக்குடும்பத்தில் பிறக்கிறது. எது சிறப்பான கர்மவினை என்று நாம் ஆராய்ந்து பார்த்தால் மனதின் சத்வகுணத்தை அதிகப்படுத்தும் உணவு வகைகளான பால், வெண்ணெய், நெய், தயிர், மோர், இனிப்புப் பண்டம் எளிதில் ஜீர்ணமாகக் கூடிய கறிகாய் வகைகள், அவைகளை சரியான நேரத்தில் உண்பது, செயல்களை செய்வதில் ஆலோசனைக்குப் பிறகே செய்தல், பொருள் பற்று இல்லாதிருத்தல், தானம், சமநோக்கு, உண்மையே பேசுதல், பொறுமை, சான்றோருக்கு வேண்டிய உதவிகளை செய்து அவர்களுடனிருத்தல், சதா ஈஸ்வர பக்தி, உயர் சிந்தனைகள் போன்றவை கர்மவினைகள் சிறப்பாக அமையும்படி செய்யும் ஒரு சில உதாரணங்கள். ஜீவாத்மாவின் உடல் பிரவேசம் கண்களுக்குப் புலப்படாதிருக்கிறது. உடலின் அமைப்பையும் குழந்தையின் மன நிலையும் சிறப்பாக அமைவதற்கு தாய் தந்தையரின் ஆரோக்யமான முட்டையும் விந்துவும் காரணமாக அமைகின்றன. கருவுற்ற நிலையில் தாயாரின் உணவுப் பழக்கங்களும் நடவடிக்கைகளும் மனதில் எழும் எண்ணங்களின் வெளிப்பாடும் தூய்மையாக அமையும் பக்ஷத்தில் குழந்தையும் உடல் ஆரோக்யத்தையும் உயர் சிந்தனைகளை கொண்டதாகவும் ஜனனம் பெறுகிறது.

கர்மவினை எதுவாயினும், உயர்குடிப்பிறப்பாயினும் மனித உடலில் வாதம்-பித்தம்-கபம் எனும் மூன்று தோஷங்கள் மட்டுமே உடல் அமைப்பை தீர்மானம் செய்கின்றன. இம்மூன்று தோஷங்களின் ஏதேனும் இரண்டு அதிக அளவில் சேர்ந்தால் வாத கபம், பித்த கபம், வாத பித்தம் என்று மூன்று வகையில் உடல் அமைப்பில் மாறுதல்களைக் காணலாம். வெறும் வாதத்தை மட்டும் அதிகமாகக் கொண்டு பிறக்கும் குழந்தைக்கு ஆரோக்யம் மிகக் குறைவாகவும், பித்தம் மட்டும் அதிகமானால் மத்யம நிலையில் ஆரோக்யமும், கபத்தை மட்டும் அதிக அளவில் பெற்றும் வரும் குழந்தை உத்தம ஆரோக்யமாகவும் அமையும். இவை அனைத்தையும் விட சமமான நிலையில் மூன்று தோஷங்களையும் கொண்ட உடலுக்குத்தான் தீர்க்க ஆயுஸும் ஆரோக்யமும் அமையும். இரண்டு தோஷங்களின் சேர்க்கை நிந்திக்கக்கூடியது அதாவது நல்லதல்ல என்பது ஆயுர்வேத அறிஞர்களின் கூற்று. இம்மூன்று தோஷங்களின் அதிக அளவு, குறைந்த அளவில் சேர்க்கை போன்றவற்றை கருவுற்றிருக்கும் பெண்ணின் உணவும், செயல்களும் தீர்மானிக்கின்றன. இதில் தந்தையின் பங்கு விந்தவின் சேர்க்கையில் நிர்ணயம் செய்கிறது.

வறட்சி, லேசானது, குளிர்ச்சி போன்ற தன்மைகளையுடைய வாயுதஷம், அளவில் மிகக் குறைந்த உணவு, ஆயாஸம், மாலை நேரம், காமம், சோகம், பயம், சிந்தை, இரவில் தூக்கமின்மை, அடிபடுதல், நீந்துதல், உணவு ஜீர்ணமான பிறகும் சீற்ற்தை அடைகின்றது. காரம், புளிப்பு, உப்புச் சுவை, சூடான பூமி, பசி தாகம் அடக்குதல், நடுப்பகல், உணவு ஜீர்ணமாகும் தருவாயிலும் பித்தம் சீற்றமாகின்றது.

இனிப்பு, நெய்ப்புத்தன்மை, குளிர்ச்சியான உணவு, பகல்தூக்கம், பசி மந்தித்தல், காலை நேரம், உடல் உழைப்பின்றி ஸுகமாயிருப்பது, உணவு சாப்பிட்டவுடனும் கப தோஷம் அதிகரிக்கின்றது.

மேற்கூறிய காரணங்களை சரியாக உணர்ந்து செயல்பட்டு தாயானவள் குழந்தையின் ஆரோக்யத்தில் பற்றுக் கொண்டவளாக இருத்தல் வேண்டும்.

இம்மூன்று தோஷங்களும் உடலின் அனைத்து பகுதிகளில் பரவியிருந்தாலும் கூட வாயு தோஷத்தின் ஆதிக்கம் தொப்புள் பகுதியின் கீழ்ப் பகுதி முதல் கால் அடிப்பகுதி வரையில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. வாயுவின் சீற்றத்தினால் தான் இடுப்பு, மூட்டுவலி, கணுக்கால் வலி போன்றவை ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் வாயுவின் சீற்றம் ஏற்படாதவாறு பாதுகாக்கலாம்.

பித்தம் தன் ஆதிக்கத்தை இதயப் பகுதி முதல் தொப்புள் வரை வைத்திருப்தால் இரைப்பையில் உணவை ஜெரிப்பதற்கான வழி சுலபமாக உள்ளது. பித்தத்தின் ஆதிக்கப் பகுதிகளில் தான் கல்லீரல், மண்ணீரல், டியோடினம் மற்றும் பேன்கிரியாஸ் போன்ற முக்ய உறுப்புகள் இடம் பெறுகின்றன.

கபம் இதயத்திற்கு மேல் பகுதியிலிருந்து தலை வரை ஆதிக்கம் செலுத்துகிறது. உடலை பலப்படுத்தி நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இம்மூன்று தோஷங்களின் சமமான அளவை எவர் ஒருவர் சிறந்த உணவால், செயலால் பெறுகிறாரோ அவரே ஆரோக்யமானவர். அறுசுவை உணவில் சுவையே தோஷங்களின் ஏற்றக் குறைச்சலை செய்கின்றன.

1. இனிப்பு, புளிப்பு உப்புச் சுவை - வாதத்தின் சீற்றத்தைக் குறைக்கின்றன.

2. காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை - கபத்தின் சீற்றத்தைக் குறைக்கின்றன.

3. துவர்ப்பு, கசப்பு, இனிப்புச் சுவை - பித்தத்தின் சீற்றத்தைக் குறைக்கின்றன.

4. இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை - கபத்தை அதிகரிக்கும்

5. காரம், கசப்பு துவர்ப்புச் சுவை - வாதத்தை அதிகரிக்கும்

6. புளிப்பு, காரம், உப்புச் சுவை - பித்தத்தை அதிகரிக்கும்

ஆக அறுசுவை உணவு வகைகளையும் சரியான அளவில் உணவில் சேர்ப்பவருக்குத்தான் ஆரோக்யம் புலப்படும்.



ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பழுதான சிறுநீரகமா? பயம் வேண்டாம்!
First Published : 19 Apr 2009

முற்றிலும் செயலிழந்து போய், டயலிஸஸ் செய்து கொண்டும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஏராளமான நோயாளிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் மூலம் முழு ஆரோக்கியத்தையும் திரும்பப் பெறும் வகையில் சிறுநீரகங்கள் மீண்டும் தங்கள் இயக்கத்தைத் தொடங்குமாறு செய்ய முடியுமா?

எஸ்.அனந்தராமன்,
சென்னை - 40.


சிறு நீரை வெளியேற்ற வேண்டிய சிறுநீரகங்கள் தம் செயல்திறனை இழந்துள்ள நிலையில், பின் முதுகின் மேற்புறத்திலிருந்து கீழ் இடுப்பு வரை, வாயுவைக் கண்டிக்கும் மூலிகைகளைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட தைலத்தால் வெதுவெதுப்பாக நீவிவிட்டு, அதன்பிறகு தொப்புளுக்குக் கீழ் பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீர்ப்பையின் மேற்புறத்திலும் தைலத்தைத் தடவி, ஒரு பெட்டியினுள் நோயாளியை தலை மட்டும் வெளியே தெரியும் வகையில் அமர்த்தி, பெட்டியினுள் மூலிகை இலைகளால் வரும் நீராவியை பரவச் செய்வதன்மூலம் உடலிலிருந்து வியர்வை பெருகும்.
தைலம் உட்புற நெய்ப்பையும், வியர்வை உட்புற மிருதுவையும் ஏற்படுத்துவதால், சிறுநீரகங்களின் உள்ளே பெரிய மற்றும் சிறிய கிளைகளாகப் படர்ந்து விரிந்துள்ள ரத்தக் குழாய்களில் ரப்பர் போன்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. விரிந்து சுருங்கும் தன்மையை இந்தக் குழாய்கள் அடைந்துவிட்டால் சிறுநீரகங்களின் மந்தமான செயல்பாடு நீங்கி, அவை மறுபடியும் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. ரத்த அழுத்தம் சிறுநீரகங்களின் உள்ளே சரியாகிவிட்டால், சிறுநீரைப் பிரித்து எடுக்கும் வேலை அவற்றிற்கு எளிதாகிவிடும்.
சிறுநீர்த்தடை உள்ளவர்கள், அதிலும் முக்கியமாக டயலிஸஸ் செய்து கொள்பவர்கள் தண்ணீரை அதிகம் அருந்தக் கூடாது என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தத் தண்ணீரையே ஒரு மூலிகைத் தண்ணீராக்கிப் பருகினால் சிறுநீரகங்களின் திசுக்கள் வலுப்பட வாய்ப்பிருக்கிறது. உடலில் தேவையற்ற நீர்த்தேக்கத்தையும் தவிர்க்கலாம். தர்ப்பை வேர், கரும்புவேர், வெள்ளரி விதை, நெருஞ்சில் விதை, நீர்முள்ளி ஆகியவற்றை வகைக்கு 3 கிராம் வீதம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரை லிட்டராகக் குறுக்கி, வடிகட்டி, மண்பானையில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த மூலிகைத் தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தக்க இடைவெளிவிட்டு ஒரே நாளில் பருகிவர, சிறுநீரகங்களின் உள்ளே சென்று எளிதாக வடிகட்டிகளைத் தூண்டச் செய்யும்.
நோயாளிகளின் கிரியாட்டின் மற்றும் யூரியா ஆகியவற்றின் அளவு, ரத்தத்தில் இரும்புச் சத்து, பாஸ்பரஸ் அளவு போன்றவை அடிக்கடி கண்காணிக்கப்பட வேண்டியவை. சிறுநீரக செயல்பாடு மேம்பட்டுவிட்டால் இவை அனைத்தும் சாதாரணநிலைக்குத் திரும்பிவிடும். டயலிஸஸ் மூலம் வலுக்கட்டாயமாக ரத்தத்திலிருந்து நீரைப் பிரித்து எடுத்து வெளியேற்றுவதால், சிறுநீரகங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. அதுவே அவற்றிற்கு மந்தமான நிலையைத் தந்துவிடுகின்றன.
சிறுநீர்த்தடை நீங்க உணவுக்கு முன்பாகவும், உணவு செரித்த பின்னரும் பருகப்படும் நெய் உதவுகிறது. சாதாரண நெய்யைக் காட்டிலும் வஸ்த்யாமயாந்தககிருதம் எனும் நெய் மருந்து சாப்பிட உகந்தது. 10 மி.லி. நெய்யை உருக்கி காலை உணவிற்கு முன்பாக ஒரு தரம் சாப்பிட்டு, உண்ட காலை உணவு செரித்த பிறகு, இதே நெய் மருந்தை மறுபடியும் உருக்கி, 20 மி.லி. அளவு சாப்பிட வேண்டும். இந்த நெய் மருந்து செரித்த பிறகே அடுத்த உணவைச் சாப்பிட வேண்டும். வஸ்தி என்றால் சிறுநீர்ப்பை. ஆமயம் என்றால் நோய். அந்தகம் என்றால் இல்லாமல் செய்துவிடுதல். அதாவது சிறுநீரகக் கோளாறுகளை இந்த நெய் நீக்குவதால் அதற்கு வஸ்த்யாமாயாந்தககிருதம் என்று பெயர். கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலைக் கடைகளில் இந்த மருந்து விற்கப்படுகிறது.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனதை அமைதிப்படுத்தும் மருந்துகள்!

ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் கர்ப்பமாக இருந்தேன். கருப்பையில் கட்டி இருந்ததால் வேறு வழியின்றி ஆபரேஷன் மூலம் கருவுடன் சேர்த்து கர்ப்பப்பை அகற்றப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களில் 10 கிலோ எடை கூடியுள்ளது. கால் முட்டி வீங்கி மிகவும் வலி உள்ளது. பொறுமையின்மை, அவசர புத்தி, கோபம் அதிகமானால் கையில் கிடைக்கும் பொருளைத் தூக்கி எறிதல், பிரச்னைகளைத் தாங்கும் மனவலிமை இல்லை. என்னை ஹிஸ்டீரியா நோயாளி என்கிறார்கள். இவற்றிலிருந்து நான் விடுபட என்ன செய்வது?எம்.சத்தியப்பிரியா, திருப்பூர்.

உங்களுடைய நீண்ட கடிதத்தில் உங்கள் வயது 35 என்றும், ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். சிறுவயதிலேயே கருப்பை நீக்கமும், அடுத்ததாக ஓர் ஆண் வாரிசை நீங்கள் எதிர்பார்த்திருந்து அது கிடைக்காமற் போன ஏமாற்றத்தாலும், இனி கருவைச் சுமக்க இயலாது என்ற மனவருத்தமும் சேர்ந்து உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நன்றாகத் தெளிவாகிறது. உறவினர்களிடம் இருந்தும் மன வருத்தம் ஏற்படும்படியாகப் பேச்சுகளை இவ்விஷயத்தில் நீங்கள் கேட்டிருந்தாலும், ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையும் அவர்களைப் பார்த்தால் வெறுப்பும் ஒதுங்கிக் கொள்ளும் மனப்பான்மையும் தங்களுக்கு நேர்ந்திருந்தால் மனம் மேலும் மேலும் பலவீனமடைந்து நீங்கள் குறிப்பிடும் மன உபாதைகள் அனைத்தும் தோன்றக் கூடும்.இறைவன் உங்களுக்கு ஓர் அழகான பெண் குழந்தையைக் கொடுத்துள்ளார். குழந்தையே பிறக்காதா என்று பல பேர் ஏங்கிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் உங்களுக்குக் கிடைத்துள்ள அன்பான சுட்டியான பெண்ணை அரவணைப்புடன் வளர்த்து நன்றாகப் படிக்க வைத்து அவளுடைய வருங்கால வளமான வாழ்விற்காக நீங்கள் திட்டமிடலாம்.மனிதர்கள் எதை அடக்கக் கூடாது, எதை அடக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளது. இயற்கை உந்துதல்களாகிய வாயு, மலம், சிறுநீர், தும்மல், தண்ணீர் தாகம், பசி, தூக்கம், இருமல், வேகநடை அல்லது ஓட்டத்தினால் ஏற்படும் பெருமூச்சு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அடக்குவதோ, வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதோ கூடாது என்கிறது. அவற்றை அடக்குவதால் ஏற்படும் நோய்களும், அதற்கான சிகிச்சை முறைகளையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளது. இம்மையிலும், மறுமையிலும் நன்மையை விரும்புகிறவர், எப்போதும் புலன் அடக்கத்தோடு இருந்து கொண்டு, பேராசை, பொறாமை, பகைமை, குரோதம், வஞ்சனை, துரோகம் நினைத்தல் முதலிய மனதைச் சார்ந்த உந்துதல்களை அடக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் உபதேசிக்கிறது.மனம் சார்ந்த இவற்றைப் பலரும் உங்களிடம் காட்டியிருக்கக் கூடும். அதனால் நீங்கள் வருத்தம் ஏதும் கொள்ளாமல் கணவர், குழந்தை, உறவினர்களுடன் சகஜமாகவும் அன்புடனும் பழகி வருவதே சிறந்தது.உடல் எடை குறைய தேன் கலந்த குளிர்ந்த நீரை காலை இரவு உணவிற்குப் பிறகு அருந்தவும். முட்டி வீக்கம், வலி நீங்க சதகுப்பையை புளித்த மோருடன் அரைத்து, லேசாகச் சூடாக்கி காலை இரவு உணவிற்கு அரை மணி நேரம் முன்பாக இரண்டு முட்டியிலும் பற்று இடவும்.மனதை வலுப்படுத்த மானஸமித்ரம் எனும் ஒரு குளிகையைக் காலை மாலை சிறிது பாலுடன் வெறும் வயிற்றில் சாப்பிடவும். மனம் அமைதியாக இருக்கத் தலையில் பிரம்மீதைலம் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும்.12 அங்குலம் மேலிருந்து சட்டியில் துளையிட்டு அதன் மூலம் நெற்றி, தலை, நெற்றிப் பொட்டு ஆகிய பகுதிகளில் பிரம்மீ தைலத்தை நோயாளி படுத்த நிலையில் ஊற்றச் செய்வது மனம் சார்ந்த உபாதைகளுக்கு நல்ல சிகிச்சை முறையாகும்.மனதை அமைதியுறச் செய்யும் மருந்துகள் பல இருந்தாலும் நோயாளிக்கு நோயாளி அது மாறுபடும். மேற்குறிப்பிட்டவை அனைத்தும் பொதுவான மருந்துகள் என்பதால் அவற்றைக் குறிப்பிடுவதில் தவறேதுமில்லை.


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நீடித்த...நிலைத்த...நலம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி



நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். மிகவும் ஒல்லியாகவும், தேக வலுவின்மை, மனம் மற்றும் உடல் உறுதியின்மை, நினைத்தவற்றைச் செய்யும் கட்டுப்பாடின்மை, சோம்பேறித்தனம், எண்ணச் சிதறல் போன்றவற்றால் அதிகத் துன்பப்படுகிறேன். இதிலிருந்து தீர்வு எப்படிக் கிடைக்கும்? குமார், களக்காடு. எப்போதும் சுகத்தோடு வாழ வேண்டும் என்று மனிதர்கள் விரும்புவது இயற்கையே. நிலைத்த உடல் மற்றும் மன இன்பத்தைத் தரும் வழிகளை ஆயுர்வேதம் கீழ்காணும் வகையில் கூறுகிறது. 1.காலோ அனுகூல: காலம் அனுகூலமாக இருத்தல். காலம் என்பது பருவமாகலாம். ஜீர்ணாஜீர்ண காலமாகலாம். நோயின் விஸ்வரூபத்திற்கு எதிரான மருந்துகள் மற்றும் செய்கைகள் காலமாகலாம். வயதையும் காலத்தையும் இணைக்கலாம். பருவகாலம் மனிதர்களுக்கு வசப்படாதவை. அதற்குத் தக்கவாறு நம் உடலைப் பாதுகாக்க வேண்டும். கடும் கோடையில் கரும்புச்சாறு, இளநீர், நுங்கு, தர்பூஸ், கிர்ணிப்பழம் போன்றவற்றைச் சாப்பிட்டு, உடல் நீரை வற்றிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளும் செயல்களில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்தவும். வெளியே தெரியும் இந்தக் கால மாற்றத்தைப் போல, நீங்கள் உங்களுடைய உடல் உட்புற மாற்றங்களை மலம், சிறுநீர், வியர்வை ஆகிய கழிவுகளின் வழியாக நன்றாக அறியலாம். இவற்றில் ஏற்படும் நிறமாற்றம், வாசனை, அளவு, நேர அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உணவு மற்றும் செயல்களில் செய்யப்படும் மாற்றத்தின் வாயிலாக, நாம் இழந்த ஆரோக்கியத்தை மறுபடியும் பெறலாம். உதாரணத்திற்கு இவை அனைத்தும் மஞ்சள் நிறமாகவும், துர்நாற்றம் கொண்டவையாகவும், அளவில் அதிகமாகவும், அடிக்கடி வெளியேறினால் பித்ததோஷத்தின் சீற்றம் ஏற்பட்டிருப்பதை ஊகித்து, அதற்கு எதிரான கசப்பு, துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவைகளின் மூலம் பித்தத்தைக் கீழடக்கி, உடல் ஆரோக்கியம் பெறலாம். இதுபோன்ற மாற்றங்களை நீங்கள் கூர்ந்து கவனித்து அவற்றை ஏற்படுத்திய காரணங்களைத் தவிர்த்து ஏற்பட்டுள்ள சீற்றத்தைத் தணிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜீர்ணாஜீர்ணகாலம் என்பது உண்ட உணவு நன்றாக ஜீரணமாகிவிட்ட நிலை அல்லது ஜீரணமாகாத நிலையைக் குறிப்பது. இவ்விஷயத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். விடும் ஏப்பம் சுத்தமாக இருத்தல், உற்சாகம், மலம் சிறுநீர் தடையின்றி வெளியேறுதல், உடல் லேசாக இருத்தல், பசி தாகம் நன்றாக எடுத்தல் போன்றவை, நீங்கள் முன் உண்ட உணவு நன்றாகச் செரித்துவிட்டதற்கான அடையாளங்கள். இவற்றிற்கு நேர்எதிரான அடையாளங்கள் வயிற்றில் உணவுத் தேக்கத்தைத் தெரியப்படுத்துகின்றன. அவற்றின் தேக்கம் நீங்கும் வரை நீங்கள் அடுத்த உணவைச் சாப்பிடாதிருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். ஒரு நோய் உங்களிடம் விஸ்வரூபம் எடுத்தால் அதை உதாசீனப்படுத்தாமல் உணவு மற்றும் மருந்துகளைச் சரியான முறையில் அமைத்து அதிலிருந்து விரைவில் விடுபட முயற்சி செய்வது நீண்ட ஆயுளுக்கான வழியாகும். கப தோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, மினுமினுப்பு, நிலைப்பு ஆகியவை காணப்பட வேண்டிய உங்களுடைய வயதில் ஒன்றையும் காணவில்லை. அதற்குக் காரணம் பசித் தீயின் செயல்திறன் உங்களுக்கு மந்தமாகியுள்ளது. பசித்தீயை வளர்க்கும் உணவையும் மருந்தையும் மருத்துவரிடம் நீங்கள் உங்களுடைய உடலைக் காண்பித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 2.விஷயா மனோஞா: மனதை இன்பமுறச் செய்யும் செய்கைகளில் ஈடுபடுத்துதல். மனமகிழ்ச்சியால் உடல் புஷ்டி ஏற்படும். மனத்துன்பம் உடல் வாட்டத்தை ஏற்படுத்தும். 3. தர்ம்யா:கிரியா: செய்யும் செயல்கள் அனைத்தும் தர்மத்திற்கு உட்பட்டவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அதுவே உடல் மற்றும் மனவலிமைக்கு சிறந்த விதையாகவும் அமையும். 4. கர்ம ஸýகானுபந்தி: நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் சுகமான அனுபவத்தைத் தரும்படியாக இருக்க வேண்டும். தீய செயல்கள் என்றும் சுகத்தைத் தராது. 5. சத்வம்விதேயம்: சத்வம் என்றால் மனம். விதேயம் என்றால் சுதந்திரம். சுதந்திரமான உள்ளத்திற்கு விவேக சக்தி கூடுகிறது. நல்லதும் கெட்டதும் அது போன்ற உள்ளத்தினால் நன்கு ஆராயப்பட்டு, நல்லவற்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, உள்ளம் சுதந்திரமாக இருக்கும்போது பெறுகிறது. 6.விசதா புத்தி: தெளிந்த அறிவு. நல்ல நண்பர்களின் சேர்க்கையினாலும், சான்றோர்களின் சொற்பொழிவுகளின் மூலமாகவும் நீங்கள் தெளிந்த அறிவைப் பெற்றால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன உபாதைகள் பலவும் நீங்கிவிடும். 7.தீரஸ்ய: நல்லவற்றை மனம் நாடி, தெளிந்த அறிவைப் பெற்று அதைச் செயலாக்குவதில் வைராக்யம் கொண்டிருத்தல். மேற்குறிப்பிட்ட ஏழு விஷயங்களிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு நீடித்த நிலைத்த இன்பத்தை நீங்கள் நிச்சயம் பெறலாம்.

நன்றி தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூளையைப் பாதுகாக்க...

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்


பார்கின்ஸானிஸம் என்ற மூளை பாதிப்பு நோய் தாக்கியவர்களது செயல்பாடுகள் மிகவும் ஆமை வேகத்தில் இருக்கும். இந்த நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சைகள் உள்ளனவா? இந்த நோய் தாக்குவதற்கான காரணங்கள் எவை?எஸ்.அனந்தராமன், சென்னை - 40.

மனிதர்களுடைய மூளைப் பகுதியை ‘பிராணன்' என்ற வாயுவும், ‘தர்ப்பகம்' என்ற கபமும் தம் செயல்களின் மூலம் அறிவு, புலன்கள், நாடிகள் எனப்படும் நரம்பு மண்டலங்கள் இவற்றை நிலைநிறுத்தச் செய்கின்றன. இந்த இரு தோஷங்களின் சீற்றம், மூளையைச் சார்ந்த நரம்பு மண்டலங்களையும் அங்கிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் திரவக் கசிவுகளையும் பாதிப்படையும் வகையில் தாக்குவதால், உடல் அசைவுகள் மந்தமாகுதல், விரைப்பு, தன்னிச்சையாக கைகள் நடுங்குதல், கைகளில் வலுவற்ற தன்மை போன்ற அறிகுறிகள் தென்படும். மேலும் முகத்தைச் சார்ந்த தசைகள் அசைவற்று, கண்களை மூட முடியாமல், வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருக்கும் உபாதைகளும் காணத் தொடங்கும். நடக்கும்போது உடல் முன்னோக்கி வளைவதும், குறுகிய தள்ளாட்டத்துடன் கூடிய தடுமாற்றங்களும் ஏற்படும். சிலருக்குத் தரையில் ஒரு குச்சி அல்லது கம்பு ஒன்றைப் போட்டுத் தாண்டச் சொன்னால், அதைத் தாண்டியவுடன் நடை சீராக, தடுமாற்றம் குறைந்து சிறிது தூரம் வேகமாகவும் நடப்பார்கள். வாதத்திற்கும் கபத்திற்கும் சமமான குணம் ‘சீதம்' எனப்படும் குளிர்ச்சி மட்டும்தான். மற்ற குணங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேராதவை. அதனால் குளிர்ச்சி எனும் குணத்தைக் கொண்ட உணவு வகைகளாலும், செயல்களாலும் பருவ காலத்தினாலும் இந்த நோயின் தாக்கம் எளிதில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.தலையில் அடிக்கடி குளிர்ந்த நீரை விட்டுக் குளித்தல்,. அப்படி குளித்தபிறகு தலையைச் சரியாக துடைத்துக் கொள்ளாமல் தலைமுடியை வாரிக் கொள்ளுதல், தேங்காய் எண்ணையைத் தலையில் தேய்த்துக் கொண்டு, காலையில் இளம் வெயில் அல்லது விடிகாலையில் நடைப்பயிற்சி செய்தல், தூங்கும்போது அதிக அளவில் ஏசியை வைத்துக் கொள்ளுதல், தலைப்பகுதியில் டேபிள் மின்விசிறியின் காற்று படும்படி படுத்துக் கொள்ளுதல், இரவில் படுக்கும் முன் குளிர்ந்த நீரைப் பருகுதல், குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து சில்லிட்டுப் போன பழங்கள், பழ ரசங்கள், பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை எடுத்து அடிக்கடி சாப்பிடுதல், சில்லிட்டுள்ள தரையில் கால் பாதங்களை வைத்திருத்தல், உடல் வியர்த்துள்ள நிலையில், ஐஸ் தண்ணீரைப் பருகுதல், உணவில் குளிர்ச்சியான வீர்யத்தைக் கொண்ட வெள்ளரிக்காய், பூசணிக்காய், புடலங்காய், வெண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுதல், தவறான விதத்தில் யோகாசனப்பயிற்சி, உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல் போன்ற சில காரணங்களால் தலையைச் சார்ந்த வாத - கப தோஷங்கள் சீற்றமடைந்து நரம்புகளை வலுவிழக்கச் செய்கின்றன.இந்நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சைகள் பல உள்ளன. மூக்கினுள் மூலிகைத் தைலத்தை விடுதல், காதுகளில் எண்ணெய் நிரப்புதல், முகத்தில் மூலிகைத் தைலத்தைத் தடவி, பூண்டு வேகவைத்த சூடான பாலிலிருந்து வரும் ஆவியை முகத்தில் படும்படி செய்தல், தலையில் எண்ணைய்யை நிரப்பி ஊறவிடுதல், குடலுக்கு நெய்ப்புத் தரும் விளக்கெண்ணெயைப் பருகச் செய்து மலம் கழிக்க வைத்து அதன் பிறகு ஆசனவாய் வழியாக மூலிகைத் தைலம் மற்றும் கஷாயங்களைச் செலுத்தி குடலில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றுதல், உடல் சுத்தி முறைகள் அனைத்தையும் செய்த பிறகு, மூளைத் திசுக்கள், நரம்புகள் வலுப்படும் வகையில் மூலிகைக் கஷாயங்களைப் பாலுடன் கலந்து பருகுதல் போன்றவை சிகிச்சை முறைகளாகும்.விதார்யாதி கிருதம், தசமூல ரசாயனம், அஸ்வகந்தாரிஷ்டம், தலைக்கு க்ஷீரபலா தைலம் போன்ற சிறப்பான மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வருவதன் மூலமாக, பார்கின்ஸானிஸம் எனும் கடுமையான உடல் உபாதையின் தாக்கத்தை நன்றாகக் குறைக்க முடியும்.
(தொடரும்)



ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: "பிளீச்' செய்யாமல் "பளிச்' முகம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
First Published : 31 May 2009 11:21:00 PM IST


அழகு நிலையங்களில் உடலில் வளரும் தேவையற்ற ரோமங்களை நீக்குவது, முகத்தைப் "பிளீச்' செய்து கொள்வது போன்ற செயல்களை இளம் பெண்களும், இளம் ஆண்களும் தற்சமயம் அதிகம் செய்து வருகின்றனர். அபாயகரமான ரசாயனக் கலவை கொண்ட இவற்றைப் பயன்படுத்தாமல் ரோம வளர்ச்சி குறைய பெண்கள் ஹார்மோன் சிகிச்சையைத் தவிர்க்கும்விதத்தில் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் உள்ளனவா? எஸ்.அனந்தராமன், சென்னை - 40.

பெண்களுக்கு முகம் மற்றும் உடலில் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்க சில எளிய விஷயங்களை ஆயுர்வேதம் கூறுகிறது.
* அகில் கட்டையை நன்றாகத் தூளாக்கி தயிரின் மேல் நிற்கக் கூடிய தண்ணீரில் குழைத்து தேவையற்ற ரோம வளர்ச்சிப் பகுதிகளில் தேய்த்து, சிறிது ஊறிய பிறகு கழுவி வர அவை உதிர்வதுடன் மேனி அழகு கூடும்.ஊ கட்டை சந்தனத்தை இழைத்து அதில் குங்குமப் பூ மற்றும் சிறுநாகப் பூ பொடித்துச் சேர்த்துப் பூசி, சிறிது ஊறிய பிறகு அலம்பி விட, தேவையில்லாத மீசை, கிருதா போன்ற முடிகள் நாளடைவில் உதிர்ந்து விடும்.
* புங்கம் விதை, பச்சிலை, வாஸனக்கோஷ்டம் ஆகியவற்றைப் பொடித்து குளிர்ந்த நீரில் கரைத்து முகம் மற்றும் உடலில் பூசிக் குளிக்க, முடிகள் தேவையில்லாத பகுதிகளிலிருந்து உதிர்வதுடன் உடலிலிருந்து கெட்ட மணமும் அகலும்.
* நலங்குமாவு எனப்படும் பாசிப் பயறு, வெட்டிவேர், சந்தனம், விலாமிச்சை வேர், கோரைக் கிழங்கு, கார்போக அரிசி, பூலாங்கிழங்கு இவை அனைத்தையும் ஒரே அளவில் சேர்த்து இடித்த தூளை தயிர்த் தெளிவுடன் பூசிக் குளிக்க, தேவையற்ற முடிகள் உதிர்வதுடன் நல்ல மணத்தை உடலுக்குத் தரக்கூடியதாகும்.
* வசம்பு, கொத்தமல்லிவிதை, லோத்திரப்பட்டை ஆகியவற்றை அரைத்துப் பூச முகப் பருக்கள், தேவையில்லாத முடிகள் நீங்கி முகம் அழகாக இருக்கும்.
* கடுக்காய், மாம்பருப்பு, லவங்கப் பத்திரி, ஜடாமஞ்சி, நாவல் இலை, வாசனைக்கோஷ்டம், நெல்லிமுள்ளி, கோரைக் கிழங்கு ஆகியவற்றைப் பொடித்து தண்ணீரில் கலந்து உடலெங்கும் பூசிக் குளிக்க முக அழகைக் கெடுத்துக் கொண்டிருக்கும் முடிகள் உதிர்ந்து உடலில் மணமும் அழகும் கூடும்.
* மஞ்சிட்டி, லோத்திரப்பட்டை, ஆலம் விழுது, வாசனைக் கோஷ்டம், மஸýரப்பருப்பு, தினைமாவு, செஞ்சந்தனம் ஆகியவற்றைப் பொடித்து தண்ணீருடன் கலந்து முகத்தில் பூசி சிறிது ஊறிக் கழுவி வர, ரோம வளர்ச்சி நீங்குவதுடன் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் அழகாக இருக்கும்.
* மாதுளம்பட்டை, வேப்பம்பட்டை, ஏழிலம்பாலைப் பட்டை, லோத்திரப்பட்டை, கடுக்காய்த்தோல் ஆகியவற்றை நன்றாகப் பொடித்துத் துணியால் சலித்து சந்தனத்தூள் மற்றும் ஃபேஸ் பவுடருடன் கலந்து பூசி வர, பெண்களின் உடல்நாற்றம் நீங்கி தேவையற்ற முடியும் உதிரத் தொடங்கும்.
* மஞ்சிட்டி, பூங்காவி, மஞ்சள், மரமஞ்சள், கடுகு, பொடித்துத் தூளாக்கி, ஆட்டுப் பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஊறவைத்து முகம் கழுவி வர முகம் களையுடன் அழகாகவும் தேவையற்ற ரோமங்களையும் நீக்கிவிடும்.
* ஆண்கள் முகம் அழகாக இருக்க மஸுரப் பருப்பை பால் விட்டரைத்து முகத்தில் பூசி ஊற வைத்துக் கழுவ முகம் சிவந்து வனப்புடன் காணும்.
* தினமும் கடுகெண்ணையை மாலையில் முகத்தில் தடவித் தேய்த்துக் குளிக்க முகம் மென்மையும் மழமழப்பும் பெறும்.
* மிளகு, கோரோசனை இரண்டையும் அரைத்துப் பூச ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் முகப்பரு நீங்கி முகம் அழகாக இருக்கும்.
* அதிமதுரம், லோத்திரப்பட்டையுடன் அவை அரிசியைப் பொடித்துச் செய்யப்பட்ட மென்மையானவற்றைக் கலந்து குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் பூசி 2 - 3 மணி நேரம் ஊற வைத்து அலம்பிவிட முகம் அழகாக மாறும். ஆண்மையைப் போற்றும் அஸ்வகந்தாதி லேஹ்யம், சித்த மகரத்துவஜம், அமுக்கரா சூரணம் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலமும் ஆண்களுக்குத் திரண்ட உருண்ட வலுவான அகன்ற தோள்கள் அமையும். பெண்மையை வளர்க்கும் அசோககிருதம், பலசர்ப்பிஸ், குமார்யாஸவம் போன்றவை மென்மையும் வனப்பையும் அழகையும் பெண்களுக்குத் தருபவை. செயற்கை முறைகளைத் தவிர்த்து இயற்கை நமக்களித்துள்ள இவற்றைப் பயன்படுத்தி அழகாக, மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்வோம்.

----------------------------------------------------------------------------------------------------
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாதகபம் நீங்க...
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்


பெருங்காயம் என்றால் என்ன? அதன் பூர்வீகம் எங்கே? அதன் மருத்துவ குணங்கள் என்ன?
நே.சம்பத், அனைவருக்கும் கல்வி இயக்கம், பெரியாங்குப்பம்.

பெரின்னியல் (pernnial plant) என்னும் சிறு மரவகையின் பிசின்தான் பெருங்காயம் என்பது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களிலும் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.

இருவகை நிறங்களில் இந்தப் பிசின் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அவை இருக்கும். கருஞ்சிவப்பான பிசினும் கருப்பு வகையில்தான் சேர்க்கப்படும். வெள்ளை நிறமாக உள்ள பால் பெருங்காயம் நல்ல மணமும் மருத்துவக் குணங்கள் அதிகம் கொண்டதுமாகும்.

கலப்படம் செய்து விற்கப்படும் பெருங்காயத்தை அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. இந்தப் பெருங்காயத்தைத் தண்ணீரில் போட்டால் கரையாமல் கோந்து போலக் காணும். அந்தக் கோந்தை எடுத்து எரித்தால் கரி மட்டுமே மிஞ்சும். கலப்படமில்லாத சுத்தமான பெருங்காயமானால் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து தண்ணீர் பால் நிறமாக மாறிவிடும். மேலும் சுத்தமான பெருங்காயத்தின் மேல் தீக்குச்சியைப் பற்றவைத்துப் போட்டால் கற்பூரம் போலப் பற்றிக் கொண்டு முழுவதுமாக எரிந்துவிடும். பெருங்காயத்திலுள்ள "ஓலியோ ரெஸின்' மிக உயர்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டது.

பாவப் பிரகாசர் எனும் முனிவர் பெருங்காயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது உஷ்ணம் (சூடான வீர்யத்தைக் கொண்டது), பாசனம் (எளிதில் தானும் ஜீரணமாகி தன்னைச் சுற்றியுள்ள மற்ற உணவையும் விரைவில் ஜீரணம் செய்துவிடும்), ருச்யம் (வாயில் ருசியை அறியும்.

கோளங்களில் படிந்துள்ள அழுக்கை அகற்றி ருசியைத் தூண்டிவிடும்). ஸ்த்ரீபுஷ்பஜனனம் (கருப்பையைச் சார்ந்த முட்டையை நன்றாக உற்பத்தி செய்து மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் அதனால்தான் பிரசவித்தவுடன் தாய்க்கு இதைப் பொரித்துப் பூண்டு, பனை வெல்லம், இஞ்சிச் சாறு இவைகளுடன் கொடுப்பது உண்டு), பவ்யம் (உடலுக்கு வலுவைக் கூட்டும் பெருங்காயத்தை நெய்யில் பொரித்துத் தசமூலாரிஷ்டம், வில்வாதி லேஹ்யம், ஜீரக வில்வாதி லேஹ்யம் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சிட்டிகை சேர்த்து உணவிற்குப் பின் சாப்பிட, வயிற்றில் அஜீர்ணம், அஜீர்ண பேதி, குடலோட்டம், பசியின்மை, ஜீரண சக்திக் குறைவு ஆகியவற்றைப் போக்கி, உடலுக்கு வலுவைத் தரும்), மூர்ச்சாபஸ்மாரஹ்ருத்பரம் (மூர்ச்சை எனும் மயக்கநிலை, வலிப்பு ஆகிய நோய்களில் மிகவும் உபயோகமானது) என்று கூறுகிறார்.

ஸþம்ருத சம்ஹிதை எனும் நூல், பெருங்காயத்தைப் பற்றி மேலும் சில வர்ணனைகளைச் சேர்க்கிறது. சுவை மற்றும் ஜீரண இறுதியில் காரமானது, எளிதில் செரித்துவிடும். தீபனம் (பசித்தீயைத் தூண்டிவிடும்), ஸ்நிக்தம்(உடல் உட்புற நெய்ப்பைத் தரும்), ஸரம் (மலக்கட்டை உடைத்து மலத்தை வெளியேற்றும்).

சரகஸம்ஹிதை வாதகபாபஹம் என்கிறது. அதாவது வாதகபநோய்களை நீக்குகிறது. பெருங்காயத்தை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதில் விட காது வலி தீரும். இத்துடன் உளுந்து சேர்த்துத் தணலிலிட்டுப் புகைத்து அந்தப் புகையை உள்ளிழுக்க வயிற்று உப்புசத்துடன் ஏற்படும் மூச்சிரைப்பு மற்றும் இருமல் தணியும். பெருங்காயத்தைத் தண்ணீர் விட்டரைத்து மேல்பூசிச் சூடு காட்ட தேள்கடி வேதனை குறையும்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)