Friday, November 27, 2009

அமெக்டாலா - உணர்ச்சி வசப்படுதல் பற்றிய அறிவியல் தகவல்



அமெக்டாலா Amygdala:

அமெக்டாலாவை பற்றி தமிழி வந்த முதல் நூல்
"இட்லியாக இருங்கள்". சோம. வள்ளியப்பன்,
-------வாசித்து பாருங்கள்.

மூளை யின் இரண்டு பக்கமும், பக்கவாட்டுப் பகுதியில் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டுள்ள சிறிய சைஸ் பாதாம் பருப்பு அளவேயுள்ள உறுப்பு. இது தோற்றத்துக்கு பாதாம் பருப்பினை போல் இருப்பதால் ‌ பாதாம் பருப்பி‌ன் கிரேக்கப் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள்.













நியோகார்டெக்ஸ் தான் அன்பு பாசம், காதல் போன்ற உணர்ச்சிகளின் தலைக்காவேரி என்று சொல்லலாம். நம்முடைய அத்தனை வளர்ச்சிகளுக்கும் இன்றைய விபரீதச் சிந்தனைகளுக்கும் இவர்தான் காரணம். ஆனால் அமிக்டலா , நியோகார்டெக்ஸ் முன்னரே விலங்குகளின் தலைக்குள் வந்துவிட்ட சீனியர்.


அமிக்டலா நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுபவர்

நடக்கும் நம்பவங்களை வைத்து, இவர் நல்லவர் அவர் கெட்டவர் என்பதையெல்லாம் மனம் தனக்குத் தெரிந்த விதம் புரிந்து கொண்டு, உள்ளே போட்டுக்கொள்கிறது. பின்பு, அதை ஒட்டியே மற்ற செயல்பாடுகளை நடத்துகிறது. வேண்டியவர் வேண்டாதவர்கள் என்கிற எண்ணம் உருவாவது இப்படித்தான் .

மூளையில் இரண்டு வகையான நினைவு முறைகள் உள்ளன. ஒன்று, சாதாரண விஷயங்களை நினைவு வைத்துக் கொள்வது. அதன் பெயர் ‌ ஹிப்போகேம்பஸ். மற்றொன்று உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அதுதான் அமிக்டலா. எமொஷனல் மெமரீஸ் ஸ்டோர்.

இனம் தெரியாத பயம், கோபம் அல்லது சிலரைப் பார்த்தாலே பாசம் பொங்குவது ஏன் என்று நமக்குக் காரணம் தெரியாத உணர்வுகள், சிலருக்கு மிக அருகில் சந்தித்த விபத்துகள், அங்கு பார்த்த ரத்தம், ஆஸ்பத்திரி வாசனைகள் இன்னும் சிலருக்கு அவர்களைப் பயமுறுத்திய குரல்கள்.
என நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுபவர் இந்த அ‌மிக்டலா தான்.

கண், காது மூக்கு, உடம்பு, நாக்கு போன்ற எந்த புலனிலிருந்து ஒரு செய்தி முதலில் தலாமஸ‌்‌ு க்கு தான் போகும் தலாமஸ், அந்த விவரங்களை மூளை புரிந்து கொள்ளும் விதமாக மாற்றும்.
ஆனால் சில ஆபத்தான சமயங்களில், செய்தி, தலாமஸ‌ு க்கு போகும் போதே இன்னொரு ரூட்டில் அமிக்டலாவுக்கும் போய்விடும். நியோகார்டெக்ஸ்க்கு தகவல் தெரியும் முன்னரே அமிக்டலாவுக்குத் தகவல் நேரடியாகப் போய் அவரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்.


சரி, எப்படி இந்த அமிக்டலாவை கட்டுப்படுத்துவது,
மனதில் ஒடும் எரிச்சல் மற்றும் வெறுப்பலைகளின் வேகத்தினையும், போக்கினையும் சரியாகக் கவனித்தல், மனத்தின் எண்ண ஓட்டத்தினை, தானே வெளியாள் போல, கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தல்.
மேலும், தன்னைக் குறித்த மிகத் துல்லியமான மதிப்பீடு (Accurate Self Assessment)
தன் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் தெரிந்து கொள்வது தான் செல்ஃப் அ‌வேர்னஸ்.

Saturday, November 21, 2009

முடி வளர சித்தமருத்துவம்

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.


சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளநரை... முதுநரை... எதுவரை?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளநரை... முதுநரை... எதுவரை?
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்



இப்போது பரவலாக இருக்கும் பிரச்னை இளநரை. இதனால் பலரும் ஹேர் டை உபயோகிக்கிறார்கள். ஆனால் அவை கெமிக்கல் டை என்பதால் பல கெடுதல்கள் ஏற்படுகின்றன. இயற்கையான முறையில் முடி கருப்பாக வளர என்ன செய்ய வேண்டும். இயற்கை ஹேர் டை எப்படித் தயாரிப்பது?கலைமுருகன்,மயிலாடுதுறை.

திரிபலா சூரணத்துடன் அதி மதுரமும் பொடித்துச் சேர்த்து ஆயுர்வேத மருந்துக் கடைகளில் திரிபலாதி சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. ஓர் இரும்புச் சட்டியில் சுமார் 50 கிராம் திரிபலாதி சூரணத்தைப் போட்டு, நீலி பிருங்காதி எனும் தைலத்தை சிறிது விட்டு இளந்தீயில் வறுக்கவும். வெளிர் மஞ்சள் நிறத்திலுள்ள திரிபலா சூரணம், கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாகத் தொடங்கும். நன்றாகக் கறுப்பாக மாறியதும், அதிகம் வறுத்துவிடாமல், அதைக் கீழே இறக்கி, சூடு ஆறும் வரை இரும்புச் சட்டியிலேயே வைத்திருக்கவும்.அதன் பிறகு கறுப்பாக மாறிய இந்தச் சூரணத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். இந்தப் பொடியை சிறு அளவில் ஒரு கிண்ணத்தில் எடுத்து, நீலி பிருங்காதி தைலத்தைக் கொஞ்சமாக விட்டுக் குழைத்து ஹேர் டை பிரஷ்ஷில் நனைத்து, வெளுத்துப் போன முடிகளில் வேர் முதல் நுனி வரை மெதுவாகத் தடவ, முடி கருப்பாகத் தெரியும். இது ஒரு புதிய முயற்சியே. முடிக்கு எந்தவிதமான கெடுதலும் செய்யாது. கண்களுக்கும்,தோலுக்கும் நல்லது. இதிலுள்ள ஒரு சிறுகுறை தலைக்குக் குளித்தவுடன் இந்தச் சாயம் நீங்கிவிடும். தலைக்கு நல்லது என்பதால் இந்தக் குறையைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

அசல் இரும்புத் துண்டை அரத்தினால் ராவி மிக நுட்பமான இரும்புப் பொடி 300 கிராம் தயாரித்து, வாயகன்ற பீங்கான் பாத்திரத்தில் வைத்து, பொடி நன்றாய் மூழ்கும் அளவு பசுவின் சிறுநீரை ஊற்றி வெயிலில் வைக்கவும். இவ்விதம் 7 நாட்கள் தினம்தோறும் புதிதுபுதிதாய் பசு மூத்திரம் ஊற்றி வெயிலில் வைக்கவும். அதன் பிறகு இரும்புத்தூள் பழுக்கும் வரை இரும்புச் சட்டியில் சூடாக்கி, சூடு ஆறியதும் அம்மியில் அரைக்க வேண்டும். இரும்புப் பொடிக்குச் சமமாக வாயு விடங்கம் 300 கிராம், தேன் நெய் சற்றுத் தூக்கலாகச் சேர்த்து அரைக்கவும். இந்த லேகியத்தை வேங்கை மரத்தின் வைரத்தினால் செய்யப்பட்ட சம்புடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். அதன் மூடியும் வேங்கை மரமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வருடம் அதன் உள்ளே வைத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு காலையில் 3 கிராம், மாலையில் 3 கிராம் அளவு சாப்பிடலாம். 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மயிர் நன்றாக கறுப்பாகி வளரும். ஆயுள்காலம் பூராவும் கேசம் கறுப்பாகவே இருக்கும். நல்ல பலமாகவும் இருக்கும்.

இளநரைக்கு முக்கியமான காரணம், உடலில் பித்த தோஷத்தின் இயற்கைக் காரியம் குன்றுவதும், கெடுவதும்தான். தலைமுடியின் நரை நீங்க அதற்குத் தகுந்த தைலங்களைத் தலையில் தேய்ப்பது மட்டும் முற்றிலும் போதுமானதல்ல. இக்காலத்தில் பூசப்படும் ஹேர் டை, முடிக்குக் கெடுதலை ஏற்படுத்துவதைக் காண்கிறோம். அதனால் செயற்கைச் சாயம் பூசுவது கெடுதல். மேலுக்குத் தகுந்த தைலங்கள் பூசிக் கொண்டு உள்ளுக்கும் இதுபோன்ற ரசாயனம் சேவிப்பதே நன்மை தரும்.

விற்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் சியவனப்ராசம் லேஹ்யம், நாரசிம்ஹ ரசாயனம், குமார்யாஸவம் லோஹ பஸ்மம் போன்ற உள் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட மிகவும் நல்லது.