உணவே மருந்து
மூல நோய்க்கு மிகச் சிறந்த மருந்துணவு ரோஜாப்பூ குல்கந்து. இது கடைகளில் கிடைக்கிறது. இதனை வாங்கி வைத்துக் கொண்டு காலையும் இரவும் அல்லது இரவு படுக்கைக்குப் போகும் முன்னராவது ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். நாமே தயாரிக்கும் முறை
ரோஸ் நிறத்தில் உள்ள ரோஜா இதழ்களைத் தனியா எடுத்து அதில் புழு, பூச்சி இல்லாமல் சுத்தம் செய்து அதன் அளவிற்கு மூன்று பங்கு கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வாயகன்ற பாட்டில் ஒன்றில் போட்டு அதன் அளவிற்குத் தேன் கலந்து கிளறிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். மூல நோய் வராமல் பார்த்துக் கொள்வது, வந்துவிட்ட மூல நோயை நீக்குவதும் நீங்கள் உண்ணும் உணவில் தான் உள்ளது.
காலையில் எழுந்தவுடன் அடுக்குத் தும்மல் போடுகிறவர்கள் பலர், அவர்களுக்காக ஒரு டீ,
சுத்தம் செய்த புதினா இலை ஒரு பிடி, துளசி இலை 1 பிடி, இரண்டையும் ஒன்று சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கப்பாகக் குறுகும் படிக் கொதிக்க வைத்து வடிகட்டிப் பால் சர்க்கரை சேர்த்தோ அல்லது தனித்தோ சாப்பிடலாம்.
சாதாரணமாக டீ கடையில் டீ சாப்பிடுவர்களுக்கு டீத்தூளில் என்னவெல்லாம் கலப்படம் செய்யப்படுகிறது என்பதை செய்தித்தாள் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதனால் கலப்பட டீயைத் தவிருங்கள். அதற்கு பதிலாக சுக்கு, மல்லி காபி, கருப்பட்டிக் காபி, வல்லாரைடீ, ஆகியவற்றை சாப்பிடலாம்.