Monday, October 4, 2010
இதயம்
மனம் என்பது இதயமா? மூளையா? என்றால் மூளையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு உறுப்பு இதயம்.
இதய வலுவிற்குச் சில மருத்துவக் குறிப்புகள்
அன்னாசிப் பழத்தை மேல் தோல் சீவிக் கறுக்குவாட்டில் வட்டங்களாய் நறுக்கி அதன் மேல் சீனி துா வி ஒரு பாத்திரத்தில் நான்கு மணி நேரத்திற்கு மேல் வைத்திருங்கள். இதனை நீரிழிவு நோய் இல்லாதவர்கள் காலையில் மட்டும் பருகிவர இதயம் பலமாகும்.
மருதமரங்கள் உள்ள சாலையில் அந்தக் காற்றில் நடந்தாலே மாரடைப்பு வராது என்பார்கள்.
உபவாசம்
மனிதனுக்கு எப்படி உணவு தேவையோ அதே போல் உண்ணா நோன்பும் தேவை.
பல மருத்துவா்களால் கொடுக்கப்பட்ட பல மருந்துகளால் குணமடையாத நோய்கள் உண்ணாநோன்பினால் குணமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
உண்மையான பசி எடுக்க தொடங்கிவிட்டால் உடலில் தீய பொருள்கள் நீங்கிவிட்டதாகவும் உடல் நல்ல நிலையை அடைந்விட்டதாகவும் கருதி நோன்பை முடிக்க வேண்டும்.
Wednesday, September 8, 2010
உணவே மருந்து
உணவே மருந்து
மூல நோய்க்கு மிகச் சிறந்த மருந்துணவு ரோஜாப்பூ குல்கந்து. இது கடைகளில் கிடைக்கிறது. இதனை வாங்கி வைத்துக் கொண்டு காலையும் இரவும் அல்லது இரவு படுக்கைக்குப் போகும் முன்னராவது ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். நாமே தயாரிக்கும் முறை
ரோஸ் நிறத்தில் உள்ள ரோஜா இதழ்களைத் தனியா எடுத்து அதில் புழு, பூச்சி இல்லாமல் சுத்தம் செய்து அதன் அளவிற்கு மூன்று பங்கு கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வாயகன்ற பாட்டில் ஒன்றில் போட்டு அதன் அளவிற்குத் தேன் கலந்து கிளறிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். மூல நோய் வராமல் பார்த்துக் கொள்வது, வந்துவிட்ட மூல நோயை நீக்குவதும் நீங்கள் உண்ணும் உணவில் தான் உள்ளது.
காலையில் எழுந்தவுடன் அடுக்குத் தும்மல் போடுகிறவர்கள் பலர், அவர்களுக்காக ஒரு டீ,
சுத்தம் செய்த புதினா இலை ஒரு பிடி, துளசி இலை 1 பிடி, இரண்டையும் ஒன்று சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கப்பாகக் குறுகும் படிக் கொதிக்க வைத்து வடிகட்டிப் பால் சர்க்கரை சேர்த்தோ அல்லது தனித்தோ சாப்பிடலாம்.
சாதாரணமாக டீ கடையில் டீ சாப்பிடுவர்களுக்கு டீத்தூளில் என்னவெல்லாம் கலப்படம் செய்யப்படுகிறது என்பதை செய்தித்தாள் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதனால் கலப்பட டீயைத் தவிருங்கள். அதற்கு பதிலாக சுக்கு, மல்லி காபி, கருப்பட்டிக் காபி, வல்லாரைடீ, ஆகியவற்றை சாப்பிடலாம்.
உணவே மருந்து
ஆண்களுக்கு அந்தப் பிரச்சினையா?
பாதம் அல்வா, கசகசா அல்வா, முந்திரி அல்வா போன்றவை விந்தணுக்களை அதிகரிக்க உதவும் துணை உணவுகள்.
வெங்காயத்தை 30 கிராம் எடுத்து முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலக்கி குடிக்க தாது புஷ்டி உண்டாகும்.
ஆப்பிள் பழத்தின் உள்ளே உள்ள விதைகளை இனித் தூக்கி எறியாதீர்கள். அதைப் பாலில் கலந்து குடிக்க ஆண்மைப் பெருக்கு உண்டாகும்.
பச்சை வேர்க்கடலையை நல்லெண்ணெயில் ஊற வைத்து தினமும் 5 கடலைகள் வீதம் சாயங்காலத்தில் தின்று வர ஆண்-பெண் சேர்க்கையில் ஆர்வம் உண்டாகும்.
முட்டை மஞ்சள் கரு ஒரு பங்கு, வெங்காயச்சாறு, தேன் வகைக்கு அரைப் பங்கு சேர்த்து ஒன்றாகக் கலக்கி அடுப்பில் ஏற்றிச் சிறு தீயாக எரித்துத் தண்ணீர் சுண்டியவுடன் எடுத்து ஆறவிட்டுக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட இந்திரியம் அதிகமாகும்.
Sunday, April 4, 2010
மின்சார பற்றாக்குறை
உலகம் முழுவதும் மாற்று மின் உற்பத்தி பற்றி அதிக அளவு நடைமுறை படுத்தி வரும் நிலையில் நாம் இன்னும் அதை பற்றி நினைக்க கூட நேரம் ஒதுக்குவதில்லை.
அன்டை நகரமான பெங்களுரில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் திட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.
நம் சென்னை நகரில் இத்திட்டம் பற்றி யாரும் பேசுவதில்லை, நடைமுறைப்படுத்த யோசிப்பதும் இல்லை, ஆனால் நாள்தோரும் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்டி, ஏ.சி. இவற்றின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
குறைந்தபட்சம் சோலார் முறையில் இயங்கும் தண்ணீர் கொதிக்க வைக்கும் கருவி (வாட்டர் ஈடர்) யாவது பயன்படுத்த அரசு தகுந்த வழிவகை செய்யலாம் என்பது என் கருத்து.
இந்த இணையத்தளத்தில் நமக்கு தேவையான விவரங்கள் மற்றும் சோலார் பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
http://www.solkar.in/
Friday, November 27, 2009
அமெக்டாலா - உணர்ச்சி வசப்படுதல் பற்றிய அறிவியல் தகவல்

அமெக்டாலா Amygdala:
அமெக்டாலாவை பற்றி தமிழி வந்த முதல் நூல்
"இட்லியாக இருங்கள்". சோம. வள்ளியப்பன்,
-------வாசித்து பாருங்கள்.




மூளையில் இரண்டு வகையான நினைவு முறைகள் உள்ளன. ஒன்று, சாதாரண விஷயங்களை நினைவு வைத்துக் கொள்வது. அதன் பெயர் ஹிப்போகேம்பஸ். மற்றொன்று உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அதுதான் அமிக்டலா. எமொஷனல் மெமரீஸ் ஸ்டோர்.
இனம் தெரியாத பயம், கோபம் அல்லது சிலரைப் பார்த்தாலே பாசம் பொங்குவது ஏன் என்று நமக்குக் காரணம் தெரியாத உணர்வுகள், சிலருக்கு மிக அருகில் சந்தித்த விபத்துகள், அங்கு பார்த்த ரத்தம், ஆஸ்பத்திரி வாசனைகள் இன்னும் சிலருக்கு அவர்களைப் பயமுறுத்திய குரல்கள்.
என நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுபவர் இந்த அமிக்டலா தான்.
கண், காது மூக்கு, உடம்பு, நாக்கு போன்ற எந்த புலனிலிருந்து ஒரு செய்தி முதலில் தலாமஸ்ு க்கு தான் போகும் தலாமஸ், அந்த விவரங்களை மூளை புரிந்து கொள்ளும் விதமாக மாற்றும்.
சரி, எப்படி இந்த அமிக்டலாவை கட்டுப்படுத்துவது,
மனதில் ஒடும் எரிச்சல் மற்றும் வெறுப்பலைகளின் வேகத்தினையும், போக்கினையும் சரியாகக் கவனித்தல், மனத்தின் எண்ண ஓட்டத்தினை, தானே வெளியாள் போல, கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தல்.
தன் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் தெரிந்து கொள்வது தான் செல்ஃப் அவேர்னஸ்.
Saturday, November 21, 2009
முடி வளர சித்தமருத்துவம்
முடி உதிர்வதை தடுக்க
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
இளநரை கருப்பாக:
முடி கருப்பாக:
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முடி வளர்வதற்கு:
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர:
புழுவெட்டு மறைய: