Sunday, April 4, 2010

மின்சார பற்றாக்குறை

மார்ச் மாதம்  முதல் நமக்கு வரவு=செலவு பற்றாக்குறை என்றால், கூட மின்பற்றாக்குறையும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.


உலகம் முழுவதும் மாற்று  மின் உற்பத்தி பற்றி அதிக அளவு நடைமுறை படுத்தி வரும் நிலையில் நாம் இன்னும் அதை பற்றி நினைக்க கூட நேரம் ஒதுக்குவதில்லை.


அன்டை நகரமான பெங்களுரில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் திட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.


நம் சென்னை நகரில் இத்திட்டம் பற்றி யாரும் பேசுவதில்லை, நடைமுறைப்படுத்த யோசிப்பதும் இல்லை, ஆனால் நாள்தோரும் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்டி, ஏ.சி. இவற்றின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.


குறைந்தபட்சம் சோலார் முறையில் இயங்கும் தண்ணீர்  கொதிக்க வைக்கும் கருவி (வாட்டர் ஈடர்) யாவது பயன்படுத்த அரசு தகுந்த வழிவகை செய்யலாம் என்பது என் கருத்து.
இந்த இணையத்தளத்தில் நமக்கு தேவையான விவரங்கள் மற்றும் சோலார் பொருட்கள் விற்பனை செய்கிறார்கள்.  பயனுள்ளதாக இருக்கும் எ‌ன நினைக்கிறேன். 
http://www.solkar.in/