Friday, November 27, 2009

அமெக்டாலா - உணர்ச்சி வசப்படுதல் பற்றிய அறிவியல் தகவல்



அமெக்டாலா Amygdala:

அமெக்டாலாவை பற்றி தமிழி வந்த முதல் நூல்
"இட்லியாக இருங்கள்". சோம. வள்ளியப்பன்,
-------வாசித்து பாருங்கள்.

மூளை யின் இரண்டு பக்கமும், பக்கவாட்டுப் பகுதியில் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டுள்ள சிறிய சைஸ் பாதாம் பருப்பு அளவேயுள்ள உறுப்பு. இது தோற்றத்துக்கு பாதாம் பருப்பினை போல் இருப்பதால் ‌ பாதாம் பருப்பி‌ன் கிரேக்கப் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள்.













நியோகார்டெக்ஸ் தான் அன்பு பாசம், காதல் போன்ற உணர்ச்சிகளின் தலைக்காவேரி என்று சொல்லலாம். நம்முடைய அத்தனை வளர்ச்சிகளுக்கும் இன்றைய விபரீதச் சிந்தனைகளுக்கும் இவர்தான் காரணம். ஆனால் அமிக்டலா , நியோகார்டெக்ஸ் முன்னரே விலங்குகளின் தலைக்குள் வந்துவிட்ட சீனியர்.


அமிக்டலா நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுபவர்

நடக்கும் நம்பவங்களை வைத்து, இவர் நல்லவர் அவர் கெட்டவர் என்பதையெல்லாம் மனம் தனக்குத் தெரிந்த விதம் புரிந்து கொண்டு, உள்ளே போட்டுக்கொள்கிறது. பின்பு, அதை ஒட்டியே மற்ற செயல்பாடுகளை நடத்துகிறது. வேண்டியவர் வேண்டாதவர்கள் என்கிற எண்ணம் உருவாவது இப்படித்தான் .

மூளையில் இரண்டு வகையான நினைவு முறைகள் உள்ளன. ஒன்று, சாதாரண விஷயங்களை நினைவு வைத்துக் கொள்வது. அதன் பெயர் ‌ ஹிப்போகேம்பஸ். மற்றொன்று உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அதுதான் அமிக்டலா. எமொஷனல் மெமரீஸ் ஸ்டோர்.

இனம் தெரியாத பயம், கோபம் அல்லது சிலரைப் பார்த்தாலே பாசம் பொங்குவது ஏன் என்று நமக்குக் காரணம் தெரியாத உணர்வுகள், சிலருக்கு மிக அருகில் சந்தித்த விபத்துகள், அங்கு பார்த்த ரத்தம், ஆஸ்பத்திரி வாசனைகள் இன்னும் சிலருக்கு அவர்களைப் பயமுறுத்திய குரல்கள்.
என நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுபவர் இந்த அ‌மிக்டலா தான்.

கண், காது மூக்கு, உடம்பு, நாக்கு போன்ற எந்த புலனிலிருந்து ஒரு செய்தி முதலில் தலாமஸ‌்‌ு க்கு தான் போகும் தலாமஸ், அந்த விவரங்களை மூளை புரிந்து கொள்ளும் விதமாக மாற்றும்.
ஆனால் சில ஆபத்தான சமயங்களில், செய்தி, தலாமஸ‌ு க்கு போகும் போதே இன்னொரு ரூட்டில் அமிக்டலாவுக்கும் போய்விடும். நியோகார்டெக்ஸ்க்கு தகவல் தெரியும் முன்னரே அமிக்டலாவுக்குத் தகவல் நேரடியாகப் போய் அவரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்.


சரி, எப்படி இந்த அமிக்டலாவை கட்டுப்படுத்துவது,
மனதில் ஒடும் எரிச்சல் மற்றும் வெறுப்பலைகளின் வேகத்தினையும், போக்கினையும் சரியாகக் கவனித்தல், மனத்தின் எண்ண ஓட்டத்தினை, தானே வெளியாள் போல, கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தல்.
மேலும், தன்னைக் குறித்த மிகத் துல்லியமான மதிப்பீடு (Accurate Self Assessment)
தன் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் தெரிந்து கொள்வது தான் செல்ஃப் அ‌வேர்னஸ்.

No comments: